அவ்வளவு வன்மம், உள்ள அவனை என்னால – பிரதீப்பின் நடவடிக்கைகள் குறித்து பவா

0
469
- Advertisement -

பிரதீப் ஆண்டனி குறித்து பிக் பாஸ் பிரபலம் பவா செல்லதுரை கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகியும், சினிமாவில் நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பவா செல்லதுரை.

-விளம்பரம்-

இவர் எழுத்தாளர், இயக்குனர் ஆவார். ஆனந்த விகடனில் நிறைய கட்டுரைகள் கதைகள் எல்லாம் இவர் எழுதி இருக்கிறார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நுழைந்த ஒரு சில வாரத்திலேயே இவர் உடல்நல குறைவு காரணமாக வெளியேறி விட்டார். இருந்தாலும் நிகழ்ச்சியில் இருந்த சில நாட்களில் இவர் சொல்லிய கதை எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

பவா செல்லதுரை குறித்த தகவல்:

அதோடு இவருக்கு ஒரு அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. பின் இவர் குணம் அடைந்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பவா செல்லதுரை அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது, பிக் பாஸ் நிகழ்ச்சியாலும், அங்கிருந்த போட்டியாளர்களாலும் எனக்கு எந்த விதமான பிரச்சனைகள் எல்லாம் வரவில்லை. அங்கிருந்தவர்கள் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார்கள். ஆனால், நான் இன்னும் சில நாட்கள் அங்கேயே இருந்திருந்தால் என்னுடைய மரியாதை குறைந்து போய்விடும் என்ற எண்ணம் இப்போது வருகிறது.

பவா செல்லதுரை பேட்டி:

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது எனக்கு பெரிய இயக்குர் என்ற நினைப்பெல்லாம் இல்லை. அந்த 18 பேர்களில் நானும் ஒரு போட்டியாளர் என்று தான் நினைத்தேன். வெளியே வந்த பிறகுதான் என்னை அந்த மாதிரி காட்டி இருந்தார்கள். அது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் தோற்றுப்போன நபர்களுடைய வன்மம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. என்னுடைய வாழ்க்கையில் நான் பாசிட்டிவான மனிதர்களை பார்த்து தான் வளர்ந்தேன். ஆனால், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் நிறைய நெகட்டிவான மனிதர்களை பார்த்தேன்.

-விளம்பரம்-

பிக் பாஸ் குறித்து சொன்னது:

அதனால் தான் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. மேலும், ஒரு நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவர் என்னை சோம்பேறி என்று அழைத்தார். அது என்னை ரொம்பவே கஷ்டப்பட வைத்தது. அப்போதே நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். நான் வெளியே போகலாம் என்று முடிவெடுத்த போது கமல் உட்பட பிக் பாஸ் குழு எல்லாருமே என்னை இருக்க சொன்னார்கள். ஆனால், நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன்.

பிரதீப் குறித்து சொன்னது:

மேலும், நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதற்கான காரணம் நிறைய பேசலாம், நல்ல உரையாடல்களை செய்யலாம், கோடிக்கணக்கான மக்களுக்கு நம்முடைய பேச்சு சென்றடையும் என்றுதான் நினைத்து போனேன். ஆனால், அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு என்பது அதற்கு பிறகு தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருந்த பிரதீப்பிற்கு சிறுவயது காலம் பயங்கரமாக சிதைக்கப்பட்டிருந்தது. அவரை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. அவர் தான் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நிமிடமும் கேம் விளையாடி கொண்டிருந்தார் என்று கூறினார்.

Advertisement