அவ்ளோ குரூரமா இருக்காங்க – பிக் பாஸில் இருந்து வெளியேறிய பவா செல்லதுரை. வைரலாகும் வீடியோ.

0
2440
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஏழு நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதோடு கேப்டனால் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், நிகழ்ச்சியில் விசித்திராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த படிப்பு குறித்த சண்டைதான் ஹைலைட். இப்படி கடந்த வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் வீட்டில் உள்ள போட்டியாளர்களை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பவா குறித்த தகவல்:

அதன்படி சரவணன் விக்ரமும் ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றி சொல்லி இருந்தார். பின் அவர் பவா செல்லதுரை குறித்து சோம்பேறி என்று குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து இந்த வாரமும் சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு பவா செல்லதுரை சென்றிருக்கிறார். இது பலருக்குமே அதிருப்தி தான். இதை பவா செல்லதுரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது குறித்து பவா, இந்த வீட்டில் என்னால் சில டாஸ்க்களை செய்ய முடியவில்லை.

வெளியேறிய பவா:

இந்த வீட்டுக்கு நான் வரும்போது சூழ்ச்சிகளும் சதிகளும் இருக்கும் என தெரிந்துதான் வந்தேன். ஆனால், இங்கு அதிகமாக வன்மம் தான் இருக்கிறது. தொடர்ந்து இங்கு இருக்கும் டாஸ்க்களை செய்ய என்னுடைய உடலும் ஒத்துழைக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்லி இருந்தார். இதனை அடுத்து பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்குமே அதிர்ச்சி தான். பவா செல்லதுரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு உங்களுடைய கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement