டாஸ்க்னு கம்முனு இருக்கேன் – காலர் டாஸ்க்கால் கடுப்பான ரியோ – கால் செஞ்சது யாரு ?

0
995
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியது வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகிய மூவருக்கும் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்த வார இறுதியில் இருந்து தப்பித்து விட்டார். திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் வேலைகள் துவங்கியது. வழக்கம் போல போட்டியாளர்கள் நாமினேட் செய்ததர்க்கான காரணத்தை கூறி கொஞ்சம் பற்ற வைத்தார் பிக் பாஸ்.

- Advertisement -

நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் அனிதாவிற்கு தான் வாக்குக்கள் குறைவாக இருந்து வருகிறது. அனிதா கடந்த வாரமே நாமினேஷனில் இடம்பெற்றார்.

ஆனால், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட Nomination Topple Card-ஐ வெற்றி பெற்றதால் தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து கடந்த வாரம் தப்பித்தார் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கால் சென்டர் டாஸ்க் தற்போது மீண்டும் துவங்கி இருக்கிறது. இதில் ஆரி, அர்ச்சனா, சோம், ஆகியோர் பேசி முடித்த நிலையில் தற்போது அனிதா, ரியோவிற்கு போன் செய்து வெளுத்து வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான ரியோ, டாஸ்க்னு கம்முனு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement