கவின் ஷெரீனை நாமினேட் செய்ததை சொன்ன சேரன்.! இதை மட்டும் ஏன் சொல்லவில்லை கவனிசீங்களா.!

0
10939
cheran
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் ரகசிய அழைக்கப்பட்டிருந்தார் சேரன். ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்த சேரன் ஆலாஸ்லியாவை இப்போதே பதில் சொல்ல வேண்டும் என்று ஏன் வற்புறுத்தி கிறீர்கள் என்று கவினை கேள்வி கேட்டிருந்தார். அதன் பின்னர் நேற்றைய நிகழ்ச்சியில் ரகசிய அறையில் இருந்து மீண்டும் பிக்பாஸ்வீட்டிற்குள் சென்றார் சேரன்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆரம்பம் முதலே லாஸ்லியா, கவினிடம் பழகி வருவதை விரும்பாத சேரன் லாஸ்லியாவிடம் இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இருவருமே சேரன் பேச்சை கேட்பதாக இல்லை. இதனால் எப்படியாவது லாஸ்லியாவிடமிருந்து கவினை விலக்க வேண்டும் என்று போராடி வருகிறார் சேரன். இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் பற்றி வனிதா மற்றும் ஷெரினிடம் போட்டுக் கொடுத்தார்

நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ஷெரினிடம் பேசிக்கொண்டு இருந்த சேரன், கவின் குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஷெரினிடம் ‘உன்னை கவின் நாமினேட் செய்திருந்தான், நீ தர்ஷன் பின்னாடி போகல அவன் தான் என் பின்னாடி வருகிறான் என்று நீ சாக்க்ஷியிடம் சொன்னாயாம். அந்த காரணத்தை சொல்லி தான் அவன் உன்னை நாமிநேட் செய்தான் என்று கூறினார் சேரன்.

-விளம்பரம்-

ஆனால், ஷேரினை நாமினேட் செய்த தர்ஷன் பெயரை மட்டும் கூறிய சேரன், வனிதா ஷேரினை நாமினேட் செய்ததை மட்டும் கூறவில்லை. சேரன் சொன்ன போது அருகில் இருந்த வனிதாவும் அதை பற்றி வாய் திறக்கவில்லை. அதே போல சேரினும், வனிதாவை தான் நாமினேட் செய்திருந்தார். அதையும் சேரன் வணிதாவிடம் சொல்லவில்லை. இதிலிருந்தே சேரனுக்கு கவின் மீது எந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

Advertisement