இந்த தடவ நாமினேஷன்ல ரெண்டு பேரு தான் இருக்கனும்.! சேரனின் மாஸ்டர் பிளான்.!

0
9795
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் சரவணன் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேரன் மற்றும் சரவணன் இருவருக்கும் நடைபெற்ற சண்டை நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-

அந்த விஷயத்தில் பலரும் சரவணனை தான் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் இறுதியாக லாஸ்லியா, சாக்க்ஷி, அபிராமி சரவணன் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த நிலையில் சேரன் இந்த வாரம் யாரை நாம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும் எத்தனை பேர் நாமினேட் செய்யப்பட வேண்டும் என்பதையும் மதுமிதாவுடன் கூறிய unseen வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸில் கமலை தரைகுறைவாக பேசினாரா சரவணன்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் மதுமிதா பேசிக்கொண்டிருக்கையில் மதுமிதாவிடம் சேரன் ஒவ்வொரு வாரமும் 5 பேர் நாமினேட் ஆகின்றார்கள். அதனால் இந்த முறை இரண்டு மூன்று பேர்கள் தான் நாம் இயங்க வேண்டும் என்று கூறுகிறார். அதேபோல இந்த வாரம் தான் சாட்சி மற்றும் அபிராமியை சமையல் செய்யப் போவதாகவும் கூறுகிறார் சேரன்.

அதற்கு ஏற்றார்போல நேற்றைய நாமினேஷன் பிராஸ்ஸின் in போது சேரன் சாக்ஷி மற்றும் அபிராமியை தான் நாமினேட் செய்திருந்தார். அதேபோல சேரன் கூறியது போல் மதுமிதாவும்சாக்க்ஷி மற்றும் அபிராமியை தான்நாமினேட் செய்திருந்தார். ஆனால், இந்த வீடியோவை எல்லாம் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாமல் unseen வீடியோவில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement