பிரதீப்பின் ரெட் கார்ட் விஷயத்தில் என்ன நடந்தது? பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக கூல் சுரேஷ் அளித்த பேட்டி.

0
305
Cool
- Advertisement -

பிரதீப் ஆண்டனி குறித்து மனம் திறந்து கூல் சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே கமலை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் வருகிறது.

- Advertisement -

கமல் குறித்த விமர்சனம்:

இதுவரை வந்த சீசனங்களிலேயே இந்த சீசனில் தான் கமலின் பெயர் ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கிறது. அதற்கு முழுக்க முழுக்க காரணம், பிரதீப் ஆண்டனி விவகாரம் தான். பிரதீப்பால் பெண்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று மற்ற போட்டியாளர்கள் சொன்ன காரணத்தினால் பிரதிப் தரப்பு நியாயத்தை கேட்காமல் கமல், பிரதீப்பை வெளியேற்றி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்திருந்தார்கள்.

பிரதீப் ஆண்டனி குறித்த விவகாரம்:

பிரதிப்பை விட நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகிய பலருமே மோசமாக வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும்போது பிரதீப்பை எப்படி வெளியேற்றலாம் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இதற்கு கமல் விளக்கம் கொடுத்தும் கமலை விடாமல் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதனாலே கமல் அடுத்த சீசனில் விலகிடுவார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறினார். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நன்றாக தான் விளையாடி வந்தார்.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் வெளியேற்றம்:

இவர் மற்ற போட்டியாளர்களுடன் சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக தான் செய்தார். இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே இவர் வீட்டிற்கு செல்ல வேண்டும், இங்கே இருக்க பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு இவர் பிக் பாஸ் சுவரை ஏறி தாண்ட முயற்சி செய்தார். இதனாலே கடந்த வாரம் பிக் பாஸ் இவரை வெளியேற்றி விட்டார்.

பிரதீப் ஆண்டனி குறித்து சொன்னது:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு கூல் சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் பிரதீப் ஆண்டனி இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் டைட்டில் வின்னர் ஆகி இருப்பார். அவருடைய விஷயத்தை வேற மாதிரி கொண்டு போய் விட்டார்கள். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பிரதீப் டைட்டில் வின்னர் ஆகி இருப்பது நடக்காமல் போய்விட்டது. எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அந்த வீட்டுக்குள்ளே உள்ள மூன்று பேர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார்கள். விஷ்ணு, மணி, தினேஷ் என்று கூறியிருக்கிறார்.

Advertisement