-விளம்பரம்-
Home பிக் பாஸ்

போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தப்ப கூட – ரக்ஷிதா குறித்து பேசிய தினேஷின் பெற்றோர்கள்.

0
497
Rachitha

தினேஷ் -ரக்ஷிதா பிரிவு குறித்து தினேஷின் பெற்றோர்கள் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 52 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் தினேஷ், எனக்கும் என்னுடைய மனைவி ரக்‌ஷிதாவிற்கும் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருக்கிறது. நாங்கள் தனியாக தான் வசித்து வருகிறோம்.

தினேஷின் பெற்றோர்கள் பேட்டி:

இது என்னை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சோகமாக பேசி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரக்ஷிதா-தினேஷ் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தினேஷின் பெற்றோர்கள் பேட்டி எழுதி அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், ரக்ஷிதாவை நாங்கள் ஒரு குறை கூட சொல்ல மாட்டோம். அவளுடைய கேரக்டர் ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட தற்போது அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். அதனால் தான் தினேஷும் ரக்ஷிதாவும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.

ரக்ஷிதா-தினேஷ் பிரிவு:

இது எத்தனை நாளுக்கு இருக்கும் என்பது கூட தெரியவில்லை. ரக்ஷிதாவின் உறவினர்கள் எல்லோருமே நல்லவர்கள் தான் சில பேரை தவிர. அதனால் நாங்கள் அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல மாட்டோம். சமீபத்தில் கூட தினேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள். வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். தினேஷ் உண்மையில் ரொம்ப தெளிவான ஆள். இது தொடர்பாக நாங்கள் பேசும்போது கூட, அப்பா அது அப்படித்தான் இருக்கும். நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று சொல்லுவார்.

-விளம்பரம்-

ரக்ஷிதா குறித்து சொன்னது:

உண்மையில் ரக்ஷிதாவும் இவ்வளவு நாள் பிரிந்து இருக்க மாட்டாள். ஆனால், எதனால் அப்படி இருக்கிறாள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ரக்ஷிதா என்னை அம்மா என்று சொல்லி உயிராக இருப்பாள். நாங்கள் அவளை மருமகளாக பார்க்கவில்லை. எங்கள் மகளாக தான் பார்த்திருக்கிறோம். அவளைப் பற்றி எந்த மாதிரியான செய்தி வந்தாலும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம். அவள் அந்த மாதிரியான பெண் கிடையாது. தற்போது அவர் வெளியே நடந்து கொண்டிருப்பது போல ஒரு நாளும் அவள் எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டதே இல்லை என்று பெருமையாக பேசி இருக்கிறார்கள்.

ரக்ஷிதா-தினேஷ் குறித்த தகவல்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார். இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து சில வருடமாக தனியாக வாழ்கிறார். இவர்களின் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news