‘வெளியவே உன்ன பத்தி தெரியும்டா’ தினேஷ் – விஷ்ணு சண்டைக்கு ரஷிதா விவகாரம் தான் காரணமா?

0
430
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 44 நாட்களை கடந்து இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் தினேஷ்- விஷ்ணுவின் சண்டை ப்ரொமோ தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இன்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கில் இந்த வார கேப்டனான தினேஷ் பங்கு பெறவில்லை. மாறாக பிக் பாஸ் அவரை தனியாக அழைத்து அவருக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்க்கில் அனைவரும் பெரிதாக பங்கேற்கவில்லை என்று தினேஷ் பேசிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது விஷ்ணு இவருக்கு ஏதாவது ஒரு கேரக்டரை கொடுங்கள் என்று கூறியிருந்தார். இதனால் தினேஷ் உங்கள் கேரக்டரை நீங்கள் ஒழுங்காக செய்யுங்கள் என்று சாதாரணமாக கூறினார். ஆனால், விஷ்ணு அவரை வாயா போயா என்று பேச ஆரம்பித்து சத்தம்போட்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இப்படியே வாக்குவாதம் நீண்டு கொண்டு செல்ல விஷ்ணு, தினேஷை நரி என்று கூற தினேஷ் பதிலுக்கு விஷ்ணுவை அமுல் பேபி என்றும் கூறியிருந்தார். மேலும், என்னிடம் வந்து ப்ரோமோ கன்டென்ட் ரெடி செய்யாதே என்று கூறிய தினேஷ் விஷ்ணுவை கன்டென்ட் பொறுக்கி என்றும் கூறினார். இதனால் கோபமடைந்த விஷ்ணு ஒரு கட்டத்தில் தன்னுடைய செருப்பை கழட்ட முயன்றார். பின்னர் அதை அப்படியே சமாளித்து மீண்டும் தினேஷிடம் சண்டை விட்டார்.

- Advertisement -

தினேஷ்-விஷ்ணு சண்டை:

பின் தினேஷ் உட்கார்ந்து இருந்த சேரை விஷ்ணு எட்டி உதைத்து இந்த மிதிதான் உனக்கும் என்று சொல்கிறார். இப்படி இவர்கள் இருவரும் சண்டை போட்டதற்கு ஏற்கனவே நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில், ரக்ஷிதா- தினேஷ் இருவருமே திருமணம் செய்து நன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். ஏதோ சில காரணங்களால் சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரிந்து இருந்தார்கள். இவர்களுடைய விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் வரை சென்று இருந்தது. அப்போது ரக்ஷிதாவுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஜி ஜி த என்பவர் தான் எங்கள் பிரச்சனைக்கு காரணம் என்று தினேஷ் புகாரில் கூறி இருந்தார்.

ரக்ஷிதா-தினேஷ் விவகாரம்:

இதனை அடுத்து தினேஷ்- ரக்ஷிதா இடையே பிரச்சனை பெரிதானது. அதற்குப் பிறகு ரக்ஷிதா-தினேஷ் இருவரையும் முறையாக விவாகரத்து செய்ய சொல்லி காவல் நிலையம் அறிவுறுத்தி அனுப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஜி ஜி, என்னை தினேஷ் மிரட்டி இருக்கிறார். என்னை மட்டும் இல்லாமல் நடிகர் விஷ்ணுவையும் மிரட்டி இருக்கிறார் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து விஷ்ணு பேசவில்லை. அதற்குப்பின் இது குறித்து விசாரித்த போது தினேஷ், விஷ்ணுவை மிரட்டியது உண்மை தான் என்று தெரியவந்தது. காரணம் ரக்ஷிதா- தினேஷ் ஒரு சீரியலில் நடித்திருந்தார்கள். அதற்குப் பின் ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரக்ஷிதா புது வீடு, கார் என்று வாங்கினார். அந்த சமயத்தில் விஷ்ணு ரக்ஷிதாவிற்கு சில உதவி செய்திருந்தார். இது தினேஷிற்கு தெரிய வந்து விஷ்ணுவுக்கு அவர் போன் செய்து பேச பார்த்தார். ஆனால், ரக்ஷிதா சொன்னதால் தினேஷின் போனை விஷ்ணு எடுக்கவே இல்லை. அதற்கு பின் தான் விஷ்ணுவை தினேஷ் மிரட்டிருக்கிறார். பின் இது தொடர்பாக தினேஷிடம் விசாரித்த போது, நான் விஷ்ணுவை மிரட்டவே இல்லை.

ரட்சிதாவுக்கு கார், வீடு வாங்க அவர் உதவினார் என்று நானும் வேறு சிலர் சொல்லி கேள்விப்பட்டேன். அதற்கு பிறகு தான் சாதாரணமாக அவரிடம் பேச போன் செய்தேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. நேரில் சந்திக்கலாம் என்று மெசேஜ் போட்டும் அவர் வரவில்லை. அவர் மீது எந்த தவறும் இல்லை என்றால், ஆமாம் நான் தான் உதவி செய்தேன் என்று சொல்வதில் என்ன பயம்.அது மட்டும் இல்லாமல் நான் மிரட்டினேன் என்று எப்படி ஜிஜிக்கு தகவல் போனது. அவங்க அதை போலீஸ் புகாரில் சொல்றார்கள்.

இதைப் பற்றியும் கேட்க விஷ்ணுவுக்கு போன் பண்ணேன் அவர் எடுக்கவில்லை. இப்படி ஏற்கனவே விஷ்ணு- தினேஷ் இடையே புகைந்து கொண்டிருக்கும்போது பிக் பாஸ் வாய்ப்பு இருவருக்குமே கிடைத்திருக்கிறது. இருந்தாலும் இருவருமே எந்த ஒரு சர்ச்சையிலும் எந்த ஒரு சண்டையும் போட்டுக் கொள்ளாமல் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று இருவருமே கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய கோபத்திற்கும் சண்டைக்கும் இந்த பழைய சம்பவம் தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

Advertisement