இந்த வாரம் வெளியேறியது இவர் தானா ? வெளியான Verified தகவல்.

0
3600
BB
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் பற்றிய நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 83 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-
BB

அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : கடற்கரையில் நீச்சல் உடையில் தமிழ் பிக் பாஸ் 3 நடிகை நடத்திய போட்டோ ஷூட் – இவங்களுமா ?

- Advertisement -

ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.அதே போல இத்தனை வாரங்களைக் கடந்த ஆண்டும் இந்த சீசனில் இதுவரை ரகசிய அறை பயன்படுத்தப்படாமல் தான் இருக்கிறது. எனவே, இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் ரகசிய அறையில் வைக்கப்படுவாரா ? இல்லை இந்த சீசனில் ரகசிய அதை பயன்படுத்தாமலே விட்டுவிடுவார்களா என்பதும் தெரியவில்லை.

அனிதா சம்பத்திற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவரது செயல்பாட்டால் ரசிகர்கள் இவர் மீது கொஞ்சம் அதிருப்தி அடைந்தார்கள். அதிலும் இந்த வாரம் அனிதா செய்த சேட்டைகளை கொஞ்சநஞ்சம் கிடையாது. இந்த வாரம் சுவாரசியம் குறைவான போட்டியாளராக ஆரி, அனிதாவை தேர்ந்தெடுத்த போது கணவர் பெயரை குறிப்பிட்டுவிட்டார் என்று அனிதா சம்பத் கையை நீட்டி உதட்டை கடித்துஆரியை எச்சரிக்கை செய்ததை பார்த்த அனைவருமே எரிச்சல் அடைந்தார்கள் என்பதுதான் உண்மை

-விளம்பரம்-
Advertisement