இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா ? அட, இந்த விஜய் டிவி பிரபலமே சொல்லிட்டாரு.

0
1737
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடைப்படையில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதிலும் Freeze டாஸ்க்கின் போது ஷிவானியின் அம்மாவே ஷிவானி கேம் ஆடிய லட்சணத்தை பற்றிய கூறியதை கேட்ட பின்னர் ஷிவானிக்கே தான் தான் வெளியேறிய போவதாக முடிவே செய்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன் தான் வெளியேறுவார் என்று விஜய் டிவி பிரபலமும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு வேலை நான் மக்களின் துடிப்பை கணிக்க நேர்ந்தால் சோம் அல்லது ஷிவானி முதலில் காப்பாற்றப்பட்டு ரம்யா இந்த வாரம் வெளியேறுவார் என்று பதிவிட்டுள்ளார். நேற்றய நிகழ்ச்சியில் கூட ரம்யா பாண்டியனின் தம்பி உள்ளே சென்ற போது ஒருவேளை இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருந்து நீ வெளியில் வந்தால் அதற்கு நீ காரணம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement