இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டாமே – ஒரு பாச மலர் மற்றும் ஒரு ஸ்வீட் ஹார்ட் வெளியேவா ?

0
2682
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 68 நாட்களை கடந்து 10வைத்த வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா, சனம் ஆகிய ஐந்து பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இம்முறை அப்படி எதுவும் ஸ்வராசசியமாக நடைபெறவில்லை.

-விளம்பரம்-

இந்தவார நோமினேஷனில் அர்ச்சனா, ஆரி, பாலாஜி, நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் போட்டியாளர்கள் 1-ல் இருந்து 13 வரை தங்களை வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடத்தில் வந்த ஆரி, பாலாஜி, அர்ச்சனா ஆகிய மூவரும் இந்த வாரம் தங்களுக்கு பதிலாக வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த மூவரில் பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா, சோம் சேகரையும் நாமினேட் செய்தார். இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது. அதே போல 10 வாரம் நிறைவு பெற இருந்தாலும் இன்னும் 12 போட்டியாளர்கள் அப்படியே இருப்பதால் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் நிஷா மற்றும் சோம்/ஷிவானி ஆகியயோரில் 2 பேர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைபற்றிய உறுதி செய்பட்ட தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகிவிடும்.

-விளம்பரம்-
Advertisement