பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க் – அர்ச்சனாவை கண்ணீர் விட வைத்த அனிதா

0
854
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த வாரமே நடைபெற்று முடித்துவிட்டு கடந்த வாரம் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் தோல்வி பெற்ற போட்டியாளர்கள் அடிப்படையில் பாலாஜி அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான போட்டியில் அனைவருமே பங்கு பெற்று இருந்தார்கள்.இதில் அனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவர் ஆனதால் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார். இதுமட்டுமல்லாமல் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வேறு ஒரு டிவிஸ்ட்டையும் வைத்திருந்தார். அதாவது கடந்த வாரம் போட்டியாளர்கள் 1ல் இருந்து 13 வரை தங்களை வரிசைப்படுத்தி இருந்தார்கள். இதில் முதல் மூன்று இடத்தில் ஆரி, பாலாஜி, சனம் ஷெட்டி ஆகியோர் வந்தார்கள். இதில் சனம் ஷெட்டி கடந்த வாரம் வெளியேறியதால் அவருக்கு பதிலாக பாலாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல அர்ச்சனாவும் டாப் 3 இடத்தில் வந்து விட்டார்.

- Advertisement -

இந்த டாப் 3 இடத்தை பிடித்த ஆரி பாலாஜி அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷன் இல் இடம் பெற்று இருந்தார்கள் ஆனால் இவர்கள் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு சிறப்பான வாய்ப்பைக் கொடுத்தார் அதாவது இந்த மூவருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் அது இதில் பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார் ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா சோம் சேகரையும் நாமினேட் செய்தார்.

இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இதில் ஒரு குழு இயந்திரமாகவும் இன்னொரு குழு மனிதர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இதில் இயந்திரமாக இருக்கும் அர்ச்சனாவை ஆரி மற்றும் அனிதா ஏதோ செய்ய அர்ச்சனா கண்ணீர் விட்டுள்ளார். இது என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement