உங்க ஆத்துக்கார் இந்த தானா அப்புறம் ஏன் உங்க குடும்பத்துல ஒரு இந்து பேர் கூட இல்ல – சீண்டிய நபருக்கு பாத்திமா பாபு கொடுத்த பதிலடி

0
2461
- Advertisement -

வம்பு இழுத்த நெட்டிசனை பாத்திமா பாபு வெளுத்து வாங்கி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பாத்திமா பாபு :

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், இவர் ஒரு சில வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து தன்னுடைய நடன திறமை வெளிப்படுத்தி இருந்தார்.

பாத்திமா பாபு குடும்பம்:

இதற்கிடையில் பாத்திமா அவர்கள் பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, எப்போதுமே பாத்திமா பாபு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் பாத்திமா தன்னுடைய மகன்களின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன் கேட்ட கேள்வி:

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி இருக்கிறார்கள். அதில் நெட்டிசன் ஒருவர், இந்துவான பாபு என்பவரை திருமணம் செய்து கொண்ட நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் இந்து பெயர் வைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். இதற்கு பாத்திமா கூறியிருப்பது, என் கணவருக்கே அது பற்றி எதுவும் பிரச்சனை இல்லாத போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கூறியிருக்கிறார். நியாயத்தை தானே கேட்டேன் மேடம். பொதுவெளியில் நான் தவறாக எதுவும் கேட்கவில்லை என்று நெட்டிசன் கூறியிருக்கிறார்.

பாத்திமா அளித்த பதில்:

அதற்கு பாத்திமா, நான் ஒரு இந்துவை பள்ளிவாசலில் நிக்கா பண்ணிக் கொண்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது. பொத்திக்கிட்டு போகவும் என்று மீண்டும் பதில் அளித்திருக்கிறார். அதற்கு அந்த நபர் பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பாத்திமா பாபு, பொது மேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கேப்பீங்களா? என்று கோபமாக பதில் அளிக்கிறார். தற்போது பாத்திமா பாபு அளித்த பதில் தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement