தன் நண்பனின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடும் Gp முத்து – என்னா மனுஷன்.

0
364
gpmuthu
- Advertisement -

மறைந்த தனது நண்பனின் புகைப்படத்தை தனது வீட்டில் வைத்து இருக்கும் Gp முத்துவின் குணத்தை கண்டு ரசிகர்கள் பலர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது தன் மகனுடன் பிரியாணி சாப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஜி பி முத்து. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து தாமாக வெளியேறி இருந்தார். இது அவரின் ரசிகர்கள் பலரையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்பட்டது.

- Advertisement -

அதில் ஜி பி முத்துவும் ஒன்று. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஜி முத்து நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜிபி முத்து. கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.

அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தார். ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது நான் போய்தான் ஆக வேண்டும் என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட கமல, ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால், எனக்கு புகழ் பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

எப்போதும் மக்கள் அனைவரும் சிரிக்கும்படி வீடியோவை பதிவிடும் ஜி பி முத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்ணீர் மல்க கதறி கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு காரணம் அவருடைய நெருங்கிய நண்பர் செந்தில்குமார் என்பவர் காலமாகிஇருந்தது தான். தன்னுடைய நண்பரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட ஜி பி முத்து, தன்னுடைய நண்பரின் பிரிவால் வாடி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

‘நான் எல்லாரையும் சிரிக்க வைத்தேன் ஆனால் என்னை ஆண்டவன் அழ வைத்து விட்டான் என் நண்பன் என்னை விட்டு சென்று விட்டான் என்று கதறி அழுது இருந்தார். தான் முதன் முதலில் கார் வாங்கிய போது கூட தன்னுடைய மனைவி பிள்ளைகளை விட தன் நண்பனை தான் முதலில் அமர வைத்து ரவுண்டு போனதாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் நண்பனின் புகைப்படத்தை தன் வீட்டில் புகைப்படம் வைத்து இருக்கிறார் gp முத்து.

Advertisement