இதனால் தான் ஹரிஷ் கல்யாண் எனக்கு ஸ்டார் கொடுத்தார் – அளந்துவிட்ட விஷ்ணு, ஹரிஷ் கல்யாண் போட்ட பதிவை பாருங்க.

0
466
Harish
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் கொடுத்த மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். பின் இந்த வாரம் நிக்ஸன் தலைவரானார். வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

நேற்று எபிசோடில் பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்துஜா, ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உடன் கலந்துரையாடி சில மணி நேரம் பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு வெளியேறி விட்டார்கள். பின் விஷ்ணு, மணியிடம் ஹரிஷ் என்னுடைய நண்பன் தெரியுமா? நாங்கள் இருவரும் நல்ல நட்பாக பழகிருந்தோம். ரொம்ப குளோசாக இருந்தோம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ஹரிஷ் கல்யாண், சபாஆஆ முடியலடா என்று கிண்டல் செய்யும் வகையில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே விஷ்ணுவை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே விஷ்ணு இந்த சீசனின் டைட்டில் வின்னர் தான் என்று நினைத்துக் கொண்டு மற்ற போட்டியாளர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து விஷ்ணு தனக்கு மக்கள் மத்தியில் பிரபலம் அதிகமாக இருப்பதை நினைத்துக் கொண்டு திமிராகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொள்கிறார். குறிப்பாக, இவர் ஆண்களிடம் சண்டை போடுவதை விட பெண்களிடம் தான் அதிகம் தன்னுடைய வீரத்தை காண்பித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் தினேஷ் இடம் விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடி வரை சென்றது. மேலும், இந்த வாரத்திற்கு கேப்டன் தேர்வு நடைபெற்ற போதில் இருந்து விஷ்ணு உடைய செயல்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதிலும் நிக்சன் கேப்டன் ஆனதை அடுத்து விஷ்ணுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர் பல இடங்களில் தன்னுடைய கோபத்தை காண்பித்து இருக்கிறார். பின் அவர் இந்த வாரம் அர்ச்சனாவை வம்பு இழுத்திருக்கிறார். அர்ச்சனா மீது கை தூக்கி பளார் பளார் என்று அறைந்திடுவேன் என்றெல்லாம் பேசி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. இது குறித்து பலருமே விஷ்ணுவின் செயலை கண்டித்து இருக்கிறார்கள்.

Advertisement