பிரியங்கா என் கால்ல விழ சொல்ல எனக்கு இந்த வசனம் தான் தோணுச்சு – செம பங்கம் செய்த அண்ணாச்சியின் பேட்டி.

0
909
ImmanAnnachi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடனும், சவால்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். அதிலும் தெரிந்த முகங்கள் விட தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு பரிச்சயமான முகங்களில் ஒருவராக இருந்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அண்ணாச்சி வெளியேற்றம் :

பின் பிக்பாஸ் வீட்டில் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடி மற்றவர்களை மகிழ்வித்தும் இருக்கிறார். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதை குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இருந்தாலும் பிக்பாஸ் விதிமுறையை பின்பற்றி தான் ஆக வேண்டும். உண்மையாலுமே பிக்பாஸ் வீட்டில் அண்ணாச்சிக்கு பதில் அபிநய் தான் வெளியேறி இருக்க வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டைவிட்டு இமான் அண்ணாச்சி வெளியேறினாலும் கமலஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை வாங்கி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இமான் அண்ணாச்சி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் பாவனி, பிரியங்கா குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அபிநய், பாவனிக்கு இடையே என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியாது? எல்லாரும் அங்க குரூப் குரூப்பா உட்கார்ந்து பேசுவாங்க.

அபிநய் பாவனி லெட்டர் மேட்டர் :

எந்த வாரம் எபிசோடு எனக்கு தெரியல? ஒருமுறை அபிநய் லெட்டர் எழுதி பாவனிக்கு கொடுத்தார். ஆனால், என்ன எழுதிக் கொடுத்தார்? அந்த பொண்ணு எப்படி எடுத்து கொண்டது என்று யாருக்கும் தெரியாது. நான் ரெண்டு பேரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தை இத்தோட விட்டுடுங்க, அவங்க வேலைய பாருங்க. எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது. அதை பார்த்து விளையாடுங்கள் என்று சொன்னேன். பிறகு சரி என்று நினைத்தேன்.

-விளம்பரம்-

பார்த்தால் இவ்ளோ பெரிய பிரச்சனையை கொண்டு வந்து இருக்கிறார்கள். கடைசியில அபிநய் தான் பாவணி வேண்டாம் என்று சொல்ல பின்னாடி துரத்தி வந்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த அளவிற்கு அவர் போனாரா? என்று எனக்கு தெரியாது. இப்பதான் பாவனி- அபிநய் பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கு. அதே மாதிரி அமீர் கிட்டயும் நான் தனியா கூப்பிட்டு பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் லிமிட்டா பேசி பழகு, அடித்து எல்லாம் பேசிப் பழகாத என்று சொன்னேன்.

அவன் இன்னும் மாறல :

ஆனால், அவன் இன்னும் அதே மாதிரிதான் பண்ணிக்கொண்டு இருக்கிறான். இது எங்க போய் முடியப் போகும் தெரியவில்லை. பாவனி இடம் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அதே மாதிரி பிரியங்கா நம்ம ஒன்னு சொல்ல வருவதற்கு முன்னால் அதை வேற மாதிரி புரிஞ்சு டப் டப் என்று பேசுவார்கள். எப்ப பாத்தாலும் நீங்கள் குரூப் பண்ணி இருக்கிறீங்க என்று சொல்லுவார்.அதற்கு நான் கமல் சாரிடம் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டாரோ? என்று சொன்னேன். அதற்கு பிரியங்காநக்கலாக நான் பயந்துட்டேன் பயந்துட்டேன் என்று சொல்வார்.

உலகமகா நடிப்புடா :

நானும் பயந்து விட்டாயா? இதற்கு ஏன் பேசுகிறாய் என்று சொன்னேன். ஒருவேளை நான் 106 நாள் இருந்து டைட்டில் தட்டி விடுவேன் என்றெல்லாம் நினைத்து பிரியங்கா இப்படி பண்ணினாரா என்று தெரியவில்லை. அதேபோல் நான் வெளியே போகும்போது பிரியங்கா காலில் எல்லாம் விழுந்த. இது மிகப்பெரிய உலக மகா நடிப்புடா என்று நினைத்தேன். அப்புறம் அவள் நான் ஏதாவது பேசியிருந்தால் மனதில் வைக்காதீர்கள் என்று சொன்னார். நானும் எல்லாம் ஜாலி தான் என்று சொல்லிட்டு வந்துட்டேன் என்று கூறினார். இப்படி இவர் பேசின வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement