பிக் பாஸ் நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 14 பேர் வெளியேறி இருக்கும் நிலையில்இன்னும் 6 பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல்வேரு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் இசைவாணியும் ஒருவர். கானா பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசைவாணி. அதிலும் பெரிய கரி என்ற பாடலை பாடியதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது என்று சொல்லலாம். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இவருடைய கனவு லட்சியம் என்று கூறி இருந்தார்.
இசைவாணியின் முன்னாள் கணவர் :
அதுமட்டுமில்லாமல் 2020ஆம் ஆண்டு இவர் இசையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணி தேர்வு செய்து பிபிசி பெருமைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இசைவாணி 2019 ஆம் ஆண்டு ட்ரம்ஸ் கலைஞர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இசைவாணி தனக்கு திருமணம் ஆனது குறித்த தன்னுடைய கனவு குறித்து தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து பிக்பாஸில் இருந்தபோது சொல்லவில்லை.
திருமண வாழ்க்கை குறித்து இசைவாணி :
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இசைவாணி, என்னை நிறைய பேர் கேட்டு இருந்தார். நான் திருமணமானதை மறைத்து விட்டேன் என்று. ஆனால், நான் மறைக்கவில்லை அதை நான் தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வரவும் இல்லை. ஆனாலும், அதை பற்றி நிறைய பேர் கேலி செய்தார்கள். ஆனால், இதற்கு பின்னரும் நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை என்று கூறி இருந்தார்.
முன்னாள் கணவர் மீது போலீசில் புகார் :
இப்படி ஒரு நிலையில் தன்னுடைய முன்னாள் கணவர் சதீஷ் மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார் இசைவாணி. இது குறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ‘சதீஷ் அவர்களுக்கு விவாகரத்து பெற்ற பிறகு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இசைக்கச்சேரியில் எனக்குண்டான சம்பளத்தை எனக்குத் தெரியாமல் அவர் கச்சேரியில்முன் பணத்தை பெற்றுக்கொண்டு எனது மனைவியை பாட வைக்கிறேன் என கூறி பணத்தை அட்வான்ஸ் பெற்று வருகிறார். மேலும், கச்சேரிக்கு நான் பாட செல்வதில்லை. அதனால் பணத்தை இழந்தவர்கள் எனக்கு போன் செய்து பணத்தை என்னிடம் கேட்கிறார்கள்.
கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் கணவர் :
இதனால் எனது நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தி வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடத்தில் இதைப் பற்றி கேட்கும்போது ‘அப்படித்தான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும்’ என்று தகாத வார்த்தைகளால் திட்டியும் ‘நீ கச்சேரிக்கு செல்லும்பொழுது உன் மீது ஆசிட் வீசி விடுவேன்’ என்றும் ‘கொலை செய்து விடுவேன்’ என்றும் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், நானும் மேற்படி சதீஷ்ஷும் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன்.
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை :
மேலும், நான் விவாகரத்து பெற்ற விஷயங்களே பொய் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி எனக்கு தொந்தரவு செய்து வருகிறார். எனவே, ஐயா அவர்கள் எனது மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வரும் மேற்படி சதீஷ் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்தும் சதீஷ் மூலமாக சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ள எனது புகைப்படங்களையும் அகற்றியும் மற்றும் எனது பெயரில் சதீஷ் என்ற பப்லு அவர்கள் பயன்படுத்தி வரும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் ஆகிய ஐடி-களை நீக்கம் செய்யுமாறு மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று இசைவாணி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.