விஜய் டிவியில் ஒளிபரப்பை வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் போட்டியாளராக இருந்து வருபவர் நடிகை ஜனனி ஐயர் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற காலத்தில் இருந்தே இவரைபற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இவரது குடும்ப நபர்கள் பற்றிய சில தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ் சினிமா நடிகையான ஜனனி ஐயர் தமிழில் 2009 ஆம் ஆண்டு ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜனனி ஐயருக்கு ஒரு அழகான தங்கையும் இருக்கிறார். அவரது பெயர் க்ரித்திகா, மேலும், சமீபத்தில் ஜன்னனியின் குடும்பத்தினர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது ஜன்னனி ஐயரை பற்றி பேசிய அவரது தங்கை க்ரித்திகா, வீட்டில் அப்பா, அம்மா சண்டை போட்டால் கூட என்னை அழைத்து வெளியில் சென்றுவிடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,ஜனனியை, கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமனுடன் ஒப்பிடுகிறாரகள் என்று கேள்வி கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த க்ரித்திகா, தனக்கு கணேஷ் வெங்கட்டை மிகவும் பிடித்தது என்றும், அவர் நடுநிலையாக இருந்தார் என்றும், அதனால் ஜன்னனியும் அப்படி தான் இருக்கிறார்; என்று கூறியுள்ளார்.