அமுதவாணன், ஜனனி செய்த செயல், கடுப்பான ரசிகர்கள் – இவர்களையும் கமல் கண்டிப்பரா?

0
408
janany
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன் – ஜனனி செய்திருக்கும் செயலை கண்டித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது நான்காவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அதோடு பலர் புது முகங்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

பின் வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் கடந்த வாரம் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார்.

நான்காவது வாரம் டாஸ்க்:

தற்போது நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன் – ஜனனி செய்திருக்கும் செயல் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஜனனி. இவர் இலங்கை தமிழ் பெண். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ஜனனிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

அமுதவாணன்-ஜனனி செய்த செயல்:

அதேபோல் அமுதவாணன் விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மைக்கை மாட்டாமல் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்:

ஏற்கனவே செரினா, ஆயிஷா இருவரும் மலையாளத்தில் பேசி வந்ததுக்கு கமல் கண்டித்து இருந்தார். அதே போல் மைக்கை போடாமல் பேசியதற்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும்போது அமுதவாணன் – ஜனனி இருவரும் மைக் போடாமல் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு கமலஹாசன் கண்டிப்பாரா? இனிமேல் இந்த மாதிரி விதிமீறல் நடக்காமல் இருப்பதற்கு கடுமையான தண்டனை கொடுப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement