நான் இல்லாத பிக்பாஸ பாக்க புடிக்கலைனா – லைவில் பேசிய ஜனனி. வீடியோ இதோ.

0
344
janany
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 10 வது வாரத்தில் ஜனனி வெளியேற்றப்பட்டு இருந்தார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 21 பேர் கலந்து கொண்டு இருந்தார்கள் .

-விளம்பரம்-

மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் போக தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் ரக்ஷிதா, மணிகண்டன், அசீம், விக்ரமன், ஏடிகே, ஜனனி ஆகியோர் இடம்பெற்றனர்.

- Advertisement -

வெளியேறிய ஜனனி :

இதில் அதிகமாக ஜனனி,adk, மணிகண்டன் ஆகியோர் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் ADK வெளியேறினார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியேறினார். இலங்கையில் இருந்து வந்த இவர் இந்த சீசன் லாஸ்லியாவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனனி வெளியேற முக்கிய காரணம் :

ஆனால், இவர் இந்த சீசனில் வேஷ பாட்டிலாக தான் இருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மதித்தால் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போக போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் அமுதவானனுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்து விளையாடியது தான் இவரது வெளியேற்றத்தற்கு முக்கிய காரணம். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி முதல் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

மன்னிப்பு கேட்ட ஜனனி :

அதில் ‘நான் எப்படியோ என்னை பிபி வீட்டிற்குள் அப்படியே ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி…!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்… இந்த நாட்களுக்குள் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்… இந்த நிமிடம் முதல் என்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நான் இல்லாத பிக் பாஸ் :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் லைவ் ஒன்றில் ரசிகர்களுடன் ஜனனி பேசி இருந்தார். அப்போது நீங்கள் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார்கள், அதற்க்கு ஜனனி விளையாட்டாக பார்க்கவிட்டால் விடுங்கள் என்று கூறியுள்ளார்.மேலும் தான் வெளியே வந்த பின்னர் எனக்கு என்னுடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவ்வளவு ஆறுதலாக இருந்தீர்கள் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement