ஜோவிகா வெளிய வரட்டும், அப்போ 5 பொண்ணுங்க அப்படி பண்ண அவங்க அம்மா சும்மா விடுவாங்களா? – வெளுத்து வாங்கிய ரஞ்சித் தம்பதி.

0
237
Ranjith
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அதோடு இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் பிற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள். இதனால் சில பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜோவிகா இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே நன்றாகத்தான் விளையாடிக் கொண்டு வந்தார். வனிதா போல் இல்லை ஜோதிகா திறமையாக விளையாடி வருகிறார்.

Aishu

நிகழ்ச்சியில் ஜோவிகா:

தன்னுடைய வயசுக்கும் மீறி பொறுமையாக நடந்து கொள்கிறார் என்றெல்லாம் பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இவர் புல்லி கேங் என்று சொல்லப்படும் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் வேலைகள் தான் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. குறிப்பாக, இவர் பிரதீப் வெளியேறியதற்கு காரணமாகி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு கடந்த வாரம் எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியதும் ஜோவிகா தான் முதலில் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்:

ஜோவிகா, பிரதீப் மீது இருந்த கோபத்தில் தான் இப்படியெல்லாம் பேசி இருக்கிறார், ஜோவிகா நடந்து கொள்வது சரி இல்லை என்றும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் அவருடைய மனைவியும் பேட்டி அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் ஜோவிகா குறித்து கூறியது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா எல்லோருக்குமே மரியாதை கொடுத்து நன்றாக தான் பழகி வருகிறார். ஆனால், ஜோவிகா யாருக்குமே மரியாதை கொடுக்கவில்லை.

ஜோவிகா குறித்து சொன்னது:

விசித்ரா வயதில் மூத்தவர். ஆனால், அவரை பெயர் சொல்லியும், வா போ என்று மரியாதை குறைவாகவும் நடக்கிறார். அடிப்படையாக ஒருவருக்கு தரவேண்டிய மரியாதை கூட ஜோவிகாவுக்கு கொடுக்க தெரியவில்லை. இது அனைத்திற்கும் அவர் வளர்க்கப்பட்ட முறை தான் அதற்கு காரணம். நான் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் பூர்ணிமா, மாயா, ஜோவிகா அனைவரையும் கிழித்து தொங்க விடுவேன். அவருடைய பேச்சுக்கு நான் அஞ்ச மாட்டேன். அர்ச்சனாவைப் போல் நான் அழ மாட்டேன் என்று வறுத்தெடுத்திருக்கிறார்.

Advertisement