இப்போ தான் எனக்கு இந்த திறமை இருக்குனு புரியுது – முதல் வெற்றியை பதிவு செய்த வனிதா மகள் உருக்கம்.

0
1327
Jyovika
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா எமோஷனலாக பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கி மூன்று நாட்கள் கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

வழக்கம் போல் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை கலவரம் தொடங்கி விட்டது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே ஜோவிகா, தனக்கு படிப்பு வராது என்று சொன்னவுடன் சீனியஸ் நடிகர்கள் எல்லோரும் படிப்பு குறித்து அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார்கள்.

நிகழ்ச்சியில் ஜோவிகா:

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து விசித்திரா, யுகேந்திரன் இருவரும் படிப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா யாருடைய மனமும் புண்படாத வகையில் வேறு ஏதாவது பேசலாம் என்று டாபிக்கை டைவர்ட் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இது தொடர்பாக வனிதாவும் ஜோவிகாவை பாராட்டி பதிவு போட்டிருந்தார். மேலும், ஜோவிகா நேர்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடி கொண்டு வருகிறார்.

டிபேட் டாஸ்க்:

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் ஜோவிகா கண்கலங்கி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று நிகழ்ச்சியில் டிபேட் டாஸ்க் தொடங்கியிருக்கிறது. அதில் இரண்டு பேர் சேர்ந்து மாற்றி மாற்றி விவாதம் செய்ய வேண்டும். அந்த வகையில் சரவணன்- ஜோவிகா இருவரும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அப்போது ஜோவிகா, நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன்.

கண்கலங்கிய ஜோவிகா:

நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய பள்ளி அனுபவங்களை எல்லாம் சொல்லி இருக்கிறேன். நான் சில போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால், என்னை யாரும் கலந்து கொள்ள விடவில்லை. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின் தான் எனக்கு அந்த திறமை இருக்கிறது என்று தெரிகிறது என அழுது கொண்டே கூடியிருக்கிறார். இப்படி இவர் பேசியதை கேட்டு அங்கு இருந்த பிற போட்டியாளர்கள் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தி பேசியிருக்கிறார்கள்.

Advertisement