அவங்களே தான் சிகிரெட் வாங்கி புடிச்சாங்க – ஜூலியின் லட்சணத்தை சொன்ன ஸ்டூடியோ ஓனர்.

0
1890
julie
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

-விளம்பரம்-
Image

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக ஜூலி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஜூலியை போட்டோ ஷூட்டிற்காக அழைத்த பெண் ஜூலி குறித்து பல்வேறு ஷாக்கிங் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சில தினங்களுக்கு முன்னர் புதிதாக மேக்கப் ஸ்டூடியோ ஒன்றை திறந்தேன். அப்போது தெரிந்தவர்களை அழைத்து போட்டோ ஷூட் நடத்தினேன். அப்போதுதான் ஜூலியும் வந்தார் புடவை மாடல் லுக் என்று பல வெரைட்டியான போட்டோ ஷூட்கலை செய்தோம் அவரும் ஆர்வமாக ஒத்துழைத்தார்.

Image

ஒரு கட்டத்தில் அவர் சிகரெட் கிடைக்குமா என்று கேட்டு பின்னர் சிகரெட்டை பிடித்தார். அப்போது சூட் செய்வதை நிறுத்தினோம். ஆனால், அவர்தான் பரவாயில்லை இதயம் சூட் செய்யுங்கள் என்று சொன்னார். ஸ்டைலாக புகை பிடித்து விட்டு போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார்கள். அவர்கள் சொன்னபடியே போட்டோ ஷூட்டை செய்தோம். இந்த போட்டோஷூட்டில் எனக்கு 30 ஆயிரம் செலவானது. எல்லாம் நல்லபடியாக முடிந்த பின்னர் ஒருமுறை எனக்கு போன் செய்த ஜூலி நான் சொல்லும் போட்டோக்களை மட்டும் வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

போட்டோ ஷூட் முடிந்ததும் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நான் எந்த புகைப்படத்தை வெளியிட வேண்டுமோ அதை நான் வெளியிடுவேன் அதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கேட்டேன். உடனே அவர் அவரின் வக்கீலிடம் போனை கொடுத்து மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் நான் அந்த வீடியோ மற்றும் போட்டோக்களில் பதிவிட்டால் கோர்ட்டுக்கு போவேன் என்று மிரட்டினார். என்ன நினைக்கிறீர்களோ பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன் அவங்களுக்கு ஒரு வக்கீல் கிடைக்கும் போது எனக்கு ஒரு வக்கீல் கிடைக்க மாட்டாங்களா என்ன என்று கூறியுள்ளார் பிரியா

Advertisement