காஜல் கணவரை திருமணம் செஞ்சுக்கிட்டு, என்ன சீன் போட்ற- சாண்டி மனைவியை அசிங்கப்படுத்திய நபருக்கு காஜல் பதில்.

0
8690
kajal
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

-விளம்பரம்-
சாண்டி மனைவி மற்றும் குழந்தையுடன் காஜல்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல். சாண்டியின் பிரிவு குறித்து பேசுகையில் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

- Advertisement -

எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.

ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.இந்த நிலையில் சாண்டி மனைவி குறித்து சில அவதூறான கமன்ட் செய்தனர், அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட காஜல், அடக்கடவுளே தயவுசெய்து அவர்களைத் தனியாக விடுங்கள் எத்தனை முறை செல்வது எல்லாத் தவறும் என் மீது தான் அவரை ஒரு துளி அளவும் கூட நிம்மதியாக நான் வைக்கவில்லை நாங்கள் 2012 ஆம் ஆண்டே பிரிந்துவிட்டோம் எங்களுடைய விவாகரத்திற்கு தாண்டி மாணவி எந்த காரணமும் இல்லை மேலும் தாண்டி எனது கணவரும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement