தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சுஜி லீக்ஸ்கிற்கு பின்னர் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் இவர் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்ட சில விடயங்கள் தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதமாக சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் எதாவது ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறிய தமிழ் சினிமா பிரபலங்களில் நடிகரும், நடன இயக்குரமான லாரன்சும் ஒருவர்.
நடிகர் லாரன்ஸை பற்றி குற்றசாட்டை வைத்தும் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு விமர்சங்கங்களையும் வைத்தனர், அத்தொடு தன்மீதான குற்றசாட்டை மறுத்தும் பேசி இருந்தார் நடிகர் லாரன்ஸ். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வலைதளவாசி ஒருவர் நடிகர் லாரன்ஸை பற்றி அனுப்பி குறும் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் ஸ்ரீரெட்டி.
அந்த குறுஞ்செய்தியில் லாரன்ஸ் பற்றி கூறியுள்ள அந்த நபர், ஹாய் ஸ்ரீ, அனைவருமே நடிகர் லாரன்ஸை பற்றி தெரியும். அவரது தந்திரங்கள் எப்போதும் எடுபடாதா. நீங்கள் லாரன்ஸின் உண்மையான முகத்தை வெளிச்சத்தில் கொண்டு வந்துளீர்கள். நானே அவரை கிழக்கு கடற்கரை ஏரியாவில் பெண்களை அழைத்து வந்துள்ளதை பார்த்துள்ளேன். அவர் 10 பெண்களுக்கு மேல் அழைத்து வந்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Chellakutty Tbh no point blaming kamal Sir ‘cos he is the host of the show . The director of the show decides what kamalSir has to say &makes Him say what He/she(Director) wants Him to say. Hope you understand. The Director wants Ash for TRP. As simple as that. https://t.co/CRRDp2IkzE
— Kaajal Pasupathi (@kaajalActress) September 9, 2018
இந்த நபர் அனுப்பி இருந்த தகவலை த குறுஞ்செய்யை ஸ்கிறீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி , எனக்கு இது போன்ற ஒரு மெசேஜ் வந்தது. கடவுளுக்கு தெரியும் இது உண்மையா,பொய்யா என்று நீங்களே பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.