‘இன்னும் மறக்கவில்லையா ? ‘ சாண்டியுடன் வாழ்ந்த போது எடுத்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்த காஜல் – வைரல் புகைப்படம்.

0
362
Kajal
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : திடீரென்று விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா ? மருத்துவமனையில் அனுமதி ? என்ன ஆச்சு ?

சாண்டியை பிரிய காரணம் :

இதுவும் காதல் திருமணம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல். ஒரு பேட்டியின் போது சாண்டியின் பிரிவு குறித்து பேசிய காஜல் ‘நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

-விளம்பரம்-

நாங்கள் முறைப்படி திருமணம் செய்தோம் :

எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம். ஆனால், அதனை லிவிங் டு முறையில் வாழ்வதாக கூறிவிட்டார்கள்.சாண்டி என்னை பிரிவதற்கு நான் தான் முக்கிய காரணம். சாண்டியின் மீது அதிகப்படியான பாசத்தினால் அவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.

சாண்டி குறித்து கேட்ட ஷகீலா :

ஆனால், தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என்று கூறி இருந்தார். சாண்டியை பிறந்தாலும் இன்னமும் அவர் நினைவாக கையில் போட்ட டாட்டூவை மட்டும் இன்னும் நீக்காமல் இருக்கிறார் காஜல். இப்படி ஒரு நிலையில் காஜல் பசுபதி சாண்டியுடன் வாழ்ந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை காஜல் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷகிலாவின் பேட்டி ஒன்றில் காஜல் பங்கேற்று இருந்தார். அப்போது சாண்டியின் டாட்டூவை ஏன் இன்னும் நீக்கவில்லை என்று ஷகீலா கேட்டு இருந்தார்.

டாட்டூவை நீக்காத காரணம் :

இதற்கு பதில் அளித்த காஜல் ‘எப்ப பாத்தாலும் சண்டிகை பற்றிய ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அவன் நல்ல புள்ள தான் அவன் சந்தோஷமாக இருக்கிறான் அப்படியே விடுங்கள் என்று கூறியிருந்தால் மேலும் இந்த டேட்டோ குறித்து பேசுகையில் ‘அந்த டாட்டூவை எடுக்கணும்னு தான் தோணுது. என் நண்பர் ஒருவர் மூலம் இந்த டாட்டூவை எடுக்கனும்னு நெனைக்கிறேன். நான் பிரீயா இருக்க சொல்ல அவன் இருக்க மாற்றான். அவன் பிரீயா இருக்க நான் இல்ல, இப்படியே தள்ளி போயிட்டே இருக்கு’ என்று கூறியுள்ளார்.

Advertisement