படத்தை எடுத்தோமோ, சம்பாதித்தோமோனு இருக்கனும் – வெற்றிமாறனின் ராஜராஜ சோழன் கருத்து குறித்து கஞ்சா கருப்பு.

0
528
kanja
- Advertisement -

ராஜராஜ சோழன் எந்த மதமாக இருந்தால் என்ன? என்று விழாவில் கஞ்சா கருப்பு கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். பல பேரின் கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyin

மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதோடு படம் வெளியாகி கோடிகளில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்தே ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும், அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

வெற்றிமாறன் சொன்னது:

அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் வெற்றிமாறன் கூறியது, மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள்.

ராஜராஜசோழன் மதம் குறித்த சர்ச்சை:

இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. சொல்லப்போனால், தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே ராஜராஜ சோழன் இந்துவா? என்ற கேள்வி தான். இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கஞ்சா கருப்பு அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து கஞ்சா கருப்பு அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, சோசியல் மீடியாவில் ராஜராஜ சோழன் இந்துவா? முஸ்லிமா? என்று பிரச்சனை செய்கிறார்கள். எதற்கு இதெல்லாம் என்று புரியவில்லை.

ராஜராஜ சோழன் குறித்து சொன்னது:

அவர் எந்த மதமாக இருந்தால் என்ன? படத்தை எடுத்தோமோ, சம்பாதித்தோமோ என இருக்க வேண்டும். ராஜராஜ சோழனின் மதம் குறித்து பேசுவதெல்லாம் தேவையில்லாத விஷயம். எதற்காக அதைக் கிண்ட வேண்டும். நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கு. அதை விட்டு இதெல்லாம் தேவையா? என்று பேசி இருக்கிறார். இப்படி கஞ்சா கருப்பு கூறியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement