இருட்டிலும், பாத்ரூமிலும் செய்யும் விஷயம், கமல் இதையெல்லாம் கேட்கணும் – வெளுத்து வாங்கிய கஸ்தூரி.

0
396
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

பிரதீப் குறித்த சர்ச்சை:

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இதற்கு முழு காரணம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் பிற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள். இதனால் சில பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் அவரை கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கமல்:

இதனை அடுத்து சனிக்கிழமை எபிசோடில் கூட மாயா, பூர்ணிமா, ஜோதிகா, ஐசுவை பார்த்து கமல், நீங்கள் வைத்த குற்றசாட்டுகள் எல்லாம் உண்மை தானா? நான் ரெட் கார்ட் கொடுக்கவில்லை. அதற்கான அங்கீகாரம் உங்களிடம் தான் இருந்தது. நீங்கள் நினைத்திருந்தால் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் என்று இன்று சாரா மாறியாக கமல் வெளுத்து வாங்கி இருந்தார். இந்நிலையில் இது குறித்து நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி கூறியிருப்பது, பிரதீப் மகாத்மாவும் கிடையாது.

-விளம்பரம்-

மாயா, பூர்ணிமா அன்னை தெரசாவும் கிடையாது. பிக் பாஸில் நடக்கும் சண்டையில் பாதி உண்மை, பாதி பொய் இருக்கிறது. அங்கு நடக்கும் என்டர்டைன்மென்டை மக்களுக்கு காண்பிப்பதில்லை. அதை கமல் மட்டும் தான் பார்த்திருப்பார். ஆனால், கமல் பார்த்ததை வெளியே சொல்ல மாட்டார். வெளியே சொன்னால் எல்லோருக்குமே ஆப்பு வந்துவிடும். ஒரு பெண்ணை வர்ணிக்கிறது தவறே இல்லை. ஆனால், வேலைக்காரி மாதிரி இருக்கா? உங்க வீட்டு பெண்ணை பார்த்து கூட சொல்ல கூடாது? யார் யாரை லவ் பண்ணனும் என்று அனைவரும் முடிவோடு இருக்காங்க.

மாயாவை பற்றி தெரியும் :

இன்னும் இருட்டில் லிப்லாக் கொடுக்கிறது, பாத்ரூமில் கொஞ்சறது இதெல்லாமே தான் காட்டவில்லை. மாயாவை பற்றி எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் மாயா கேங்கில் பிரதீப் தான் இருந்தார். பிரதீப் செய்த காரியம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்கிறது. அது அவருக்கு புரியவில்லை. அதோடு மாயா தன்னுடைய உள்ளாடைகளை எடுத்து நிக்ஸனுக்கு காட்டி விட்டு இது சும்மா காமெடிக்கு என்று சொல்லிட்டு போறாங்க. ஆனால், அது கமல் சார் தட்டிக் கேட்கவே இல்லை என்று கூறி இருக்கிறார்

Advertisement