இதை மட்டும் செய்தால் லாஸ்லியாவிடம் அரை வாங்க தயார்.! கவின் நண்பர் போட்ட பதிவு.!

0
9619
kavin-friend
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அதில் ரசிகர்களின் அதிக ஆதரவை கொண்டவராக இருந்து வந்தார் கவின் தான். ஆனால் கடந்த வாரம் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-
kavin friend

கடந்தவாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற அனைவருமே நாமினேஷனில் இடம் பெற்றனர். எல்லா வாரமும் போல கவின் தான் கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். எனவே, கவின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் தகுதி பெற்று இருந்திருப்பார். அதேபோல பிக்பாஸில் இருந்து கவின் வெளியேறிய போதும் கவினுக்கு இருந்த ஆதரவு என்னவென்று பலரும் அறிந்தனர்.

- Advertisement -

கவின் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போது, நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது லாஸ்லியா என்னால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த போது நான் மிகவும் நெருங்கி விட்டேன் என்றும். எனவே, நான் பிக்பாஸ் வீட்டில் மேலும் சில நாட்கள் இருந்தால் அதுலாஸ்லியாவை பாதிக்கும் அதனால் அதை நடக்க நான் விரும்பவில்லை மேடையில் பேசி இருந்தார். அதேபோல கவின் வெளியே வந்த பிறகு கவின் ஆதரவாளர்கள் அனைவருமே லாஸ்லியாவிற்கு தான் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு வாக்களிக்குமாறுகவினின் நெருங்கிய நண்பரும் அருவி பல நடிகருமான பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கவினின் நண்பரான பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தபோது கவின் விளையாடுவது கேவலமான கேம் என்று கூறியதுடன் அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். மேலும், ஒரு வேளை நீ பிக்பாஸ் மேடையில் ஏறினால் அப்போது அனைவர் முன்பாக என்னை நீ அறைந்து கொள் என்றும் கூறியிருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருக்கிறார் இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் நீங்கள் அனைவரும் லாஸ்லியாவை வெற்றி பெறச் செய்தால் கவினுக்கு பதிலாக லாஸ்லியாவிடமிருந்து தான் அறை வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இறுதி போட்டிக்கும் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் கவினின் நண்பரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதே போல பிரதீப்பின் இந்த பதிவிற்கு கீழ் பல்வேறு கவின் ஆர்மியும் தங்களது ஆதரவு லாஸ்லியாவிற்கு தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் கவினின் ஆதரவு லாஸ்லியாவிற்கு தான் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. தற்போது வரை முகென் தான் ஒட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். எனவே, கவின் நண்பரின் இந்த பதிவு லாஸ்லியாவிற்கு எந்த அளவிற்கு ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement