மூன்று வருட காதல்.! பின்னர் பிரேக் அப்.! காதல் பிரிந்ததற்கு காரணத்தை சொன்ன கவின்.!

0
3202
kaviliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

-விளம்பரம்-
Kavin

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த போது நான்கு பெண்களிடமும் ஜாலிக்காக தான் பழகுகிறேன் என்று கூறியிருந்தார் கவின். இருப்பினும் இவர் மீது சாக்க்ஷியும் சரி, லாஸ்லியாவும் சரி கொஞ்சம் காதல் மயக்கத்தில் விழுந்தனர். இந்த நிலையில் தனக்கு காதலி இருப்பதாகவும் அவருடன் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார் கவின்.

kavin

நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த கவின், கடந்த மூன்று வருடங்களாக நான் சீரியஸான ஒரு சிக்கலான உறவில் இருந்தேன். நாங்கள் இருவரும் ஒரு ஐந்தாறு மாதங்கள் தான் சந்தோசமாக இஇருந்தோம். மற்ற நேரங்களில் சண்டை, பிரிவு, மீண்டும் சமாதானம் ஆவது என்று தான் இருந்தது.

-விளம்பரம்-

நான் பிக்பாஸ் வரும் முன்பு என்னை அவர் ஒதுக்கிவிட்டார். பிக்பாஸ் போகிறேன் என சொன்னதற்கு அப்படியே போய்விடு, எதுவுமே இல்லை என கூறிவிட்டார். என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார்.


Advertisement