கவின் காப்பற்றபட்ட போது சேரன், லாஸ்லியா ரியாக்ஷனை விட அதிக ரியாக்ஷன் கொடுத்த இவர் யார் தெரியுமா.!

0
1264
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை.கடந்த வாரம் வனிதா நிலையில் இனி வரும் வாரங்களில் யார் வெளியேற போகிறார்கள் என்ற விறுவிறுப்பு கூடியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு தான் அமோக ஆதரவு இருந்துவருகிறது. இதுவரை கவின் பலமுறை நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் வந்தபோதெல்லாம் அதிகமான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்துவந்தார். இந்த வாரம் கூட கவின் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

பல்வேறு இணையதளங்களில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு எனக்குத்தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. இத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் எப்படி கவினுக்கு இவ்வளவு ஆதரவு என்பது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. இதே வியப்பு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சேரனுக்கு இருக்கிறது என்பது நேற்று தெளிவாக தெரிந்தது.

நேற்று கவின், காப்பற்றப்பட்டார் என்று கமல் அறிவித்ததும் லாஸ்லியா முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். ஆனால், சேரன் கவினுக்கு பதிலாக வனிதா வெளியேறி இருந்ததை எண்ணி மிகவும் அதிருப்தியாக இருந்தார். இவர்களை எல்லாம் தாண்டி ரசிகர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், கவின் காப்பாற்றபட்டுவிட்டார் என்று அறிந்ததும் வாய் மேல் கை வைத்து விட்டார்.

-விளம்பரம்-

அது வேறு யாரும் இல்லை, ஷெரினின் தாயாரின் சகோதரி தான். கடந்த வாரம் ஷெரின் நாமினேட் ஆகி இருந்ததால் கவின் காப்பற்றபட்டதும் ஷெரின் தாயார் மற்றும் அவரது சகோதரி எங்கே ஷெரின் வெளியேற போகிறாரே என்ற அதிர்ச்சியில் இருந்தனர் . ஆனால், நேற்று ஷெரின் காப்பாற்றபிட்டுவிட்டார்.

Advertisement