லாஸ்லியா மட்டுமல்ல கவின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள்.!

0
7866
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்துவிடும். மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர்க்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக பிக்பாஸ் குழு தெரிவித்திருந்தது. இதற்கு அடுத்தகட்டமாக பிக் பாஸ் குழு நேற்று ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார்கள். அது பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிக்பாஸ் குழு அறிவித்தது. திடீரென்று கவின் நான் வெளியே செல்கிறேன் என்று முடிவு செய்தார்.

-விளம்பரம்-

அதிலும், இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோவில் கவின் அவர்கள் வெளியே போனா காட்சி வெளியிட்டார்கள் . மேலும், கவின் அவர்கள் 5 லட்சம் ரூபாய்க்கு மட்டும் வெளியே போகவில்லை. அவர் எப்பவுமே இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கு ஆதரவாகவும்,போட்டிகளில் விட்டுக் கொடுத்தும் உள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்டியாகப் போய் கொண்டிருக்கும் நியூஸ் கவின் பற்றி தான்.
இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டை விட்டு இப்போதே வெளியேறும் நபருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கும் என்றும் அறிவித்ததை தொடர்ந்து கவின் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

மேலும், கவின் வீட்டை விட்டு வெளியேறும் ப்ரோமோவை பார்த்து திரைப்பட நடிகையும், கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இருந்த யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தங்களுடைய வருத்தத்தை ட்விட்டர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கவின் நடிப்பில் வரப்போகும் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோ என்பதை காண்பித்து விட்டார் என்று அவர்கள் கூறியிருந்தார்கள். ஐஸ்வர்யா அவர்கள் ஏற்கனவே அவருடன் ஒரு படத்தில் நடித்தும் உள்ளார். மேலும், அவர் ஒரு நல்ல மனிதர். அவர் இந்த வீட்டை விட்டு வெளியே போவது ரொம்ப கஷ்டமா! இருக்கு என்று தங்களுடைய தன்னுடைய கருத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமோஜி படம் போட்டு கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கவின் வெளியே செல்வது அனைவருக்கும் வருத்தமான செயல் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், இந்த வரிசையில் சினிமா துறையில் காமெடி நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ் குமார் அவர்களும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் புரோமோவை பதிவிட்டுள்ளார். மேலும், என்னால இன்னமும் நம்ப முடியல என்று தன்னுடைய கருத்தையும் கூறியுள்ளார். சாண்டியின் மனைவி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.” ஏன்டா தம்பி இப்படி பண்ற” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டியும் லாஸ்லியாவும் வருத்தப்படுவதை விட பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் அதிகமாக மக்கள் வருத்தத்தில் உள்ளனர் என்று கருத்துக்கள் பரவி வருகின்றன.

-விளம்பரம்-

மேலும் கவின் வீட்டை விட்டு வெளியேறுவதை யாரும் விரும்பவில்லை என்றும்,இந்த பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ஆக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது என்றும் கருத்துக்கள் தெரிவித்தனர். நெருங்கிய நண்பர் சாண்டி மற்றும் லாஸ்லியா இவர்களுக்கு அவர் வெளியே செல்வது தாங்க முடியாமல் கதறி கதறி அழுதார்கள். லாஸ்லியா அவர் வெளியே செல்லும் போது கூட கதவில் கைவைத்து தடுத்து நிறுத்தி போக வேண்டாம் என்று கூறினார். இன்றைய ப்ரோமோவில் “போகாதே போகாதே நீ பிரிந்தால்”என்று ஜெயம்ரவி பாடலைப் போட்டு அனைவர் மனதையும் கலங்க வைக்கும் அளவிற்கு இன்றைய எபிசோட் இருக்கப்போகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.இதை தவிர கவின் ஒரு நல்ல மனிதன் மற்றும் நட்பிற்கு இலக்கணமாக திகழ கூடியவர் என்று இந்த செயலின் மூலம் நிரூபித்து விட்டார் என்று கருத்துகளை தெரிவிக்கிறார்கள் . இதனால் வீட்டைவிட்டு கவின் சென்றுவிட்டால் மீதியுள்ள சாண்டி, தர்ஷன், லாஸ்லியா,ஷெரின் ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்றும் தெரியவந்தது. இதில் யார் டைட்டில் வின்னர் ஆக போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர் தமிழக மக்கள்.

Advertisement