செஞ்சதையும் செஞ்சிட்டு அனிதா மீது பழியை போட்ட அர்ச்சனா – இந்த வீடியோவ பாருங்க.

0
8745
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்த சீஸனில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா நுழைந்து இருந்தார்கள். இதில் சுசித்ரா ஏற்கனவே வெளியேறி விட்டார். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

-விளம்பரம்-

கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் மேலும் இவர் எதை செய்தாலும் சரி என்று சொல்வதற்காகவே இருப்பது போல தான் ரியோ, நிஷா, சோம் ஆகியோர் இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : இனி முல்லையாக நடிக்கப்போவது இந்த நடிகையா ? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா போட்ட பதிவு.

- Advertisement -

மேலும், அர்ச்சனா ஒரு குரூப்பை அமைத்து விளையாடி வருகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதை பல முறை கமலே கூறியிருக்கிறார். அர்ச்சனா, தனது குழுவில் இருக்கும் யாரையும் தனியாக விளையாட விடமால் தொடர்ந்து தடுத்து வருகிறார். அதனால் தான் இவரது குழுவில் இருக்கும் மற்ற போட்டியாளர்களின் தனித்துவம் வெளியில் வராமல் இருந்து வருகிறது சொல்லப்போனால் கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதற்கு காரணமே அர்ச்சனா அவர்களை கைபாகையாக மாற்றிவிட்டார் என்பதால் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் அர்ச்சனாவிற்கு எதிராக அடிக்கடி பல்வேறு மீம்களும் குறும்படங்களும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றய டாஸ்கில் பாலா விளையாடி முடித்த பின்னர், நடுவராக இருந்த அர்ச்சனா மற்றும் அனிதா இருவருமே நேரத்தை கணக்கிட தவறிவிட்டனர். அப்போது அனிதா, அர்ச்சனாவிடம் நீங்கள் தான் கையில் டைமறை வைத்திருந்தீர்கள் என்று கூறினார். ஆனால், அர்ச்சனாவோ, இல்லை நான் ஸ்டார்ட் செய்துவிட்டு உன்னிடம் கொடுத்துவிட்டேன் என்றார். ஆனால், உண்மையில் அர்ச்சனா தான் தனது கையில் டைமறை வைத்திருந்தார் என்று நெட்டிசன்கள் அர்ச்சனாவிற்கு குறும்படத்தை உருவாக்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement