சென்னையில் உள்ள கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ். கவின் குறித்து சொன்ன விஷயம். வைரலாகும் வீடியோ.

0
44218
kavin-losliya
- Advertisement -

இந்த வருடம் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் மற்ற சீசன்களை விட இந்த சீசன் 3 நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏன்னா,இந்த சீசன் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருந்தது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான்.

-விளம்பரம்-

முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள்.

இதையும் பாருங்க :டிக் டாக்’ – அஜித் படங்களில் சிறந்த படமே இதான். சென்னை வந்த சல்மான் கான் பேச்சு.

- Advertisement -

எப்போவுமே நிகழ்ச்சியில் இருக்கும் வரை தான் காதல்,சண்டைகள் பற்றி பேசுவார்கள். ஆனால்,இந்த சீசன் காதல் மட்டும் தான் நிகழ்ச்சி முடிந்தும் ட்ரெண்டிங்கில் போய் கொண்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்களுடைய காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், கவினும் லாஸ்லியாவும் இது குறித்து எதையும் பேசவில்லை. இந்த நிலையில் லாஸ்லியா சென்னையில் உள்ள M O P Vaishnava கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கவின் எப்படி இருக்கிறார் என்று கேட்க, அதற்கு லாஸ்லியா, ஹம் நல்லா இருக்கிறார் என்று கூறினாராம். இதுநாள் வரை மேடைகளில் கவின் குறித்து பேசிடாத லாஸ்லியா தற்போது முதன் முறையாக கவின் குறித்து பேசியுள்ளது கவின் லாஸ்லியா ஆர்மியை குஷியாக்கியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா பாடல் பாடியும் அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement