இறுதியில் போட்டியாளர்கள் மீதே போலீசில் புகார் அளித்த மதுமிதா.! யார் மீது தெரியுமா ?

0
18944
Madhu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
madhumitha

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

இதையும் பாருங்க : எதிர் நீச்சல் பட நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! 

- Advertisement -

மேலும், கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதுமிதா தன் மீது விஜய் டிவி பொய்ப்புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி நிர்வாகம் மீது மதுமிதா நசரத் பேட்டை காவல்நிலையத்தில் தபால் மூலமாக புகார் அளித்துள்ளார். அதில், ஹலோ ஆப் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதையும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், கடந்த வாரம் வெளியேறிய கஸ்தூரி பேட்டி ஒன்றில் பங்கேற்ற போதும் மதுமிதா விஷயத்தில் ஷெரின், வனிதா, லாஸ்லியா தான் சம்பந்தபட்டவர்கள் என்றும் கூறி இருந்தார். எனவே, மதுமிதா ஷெரின், வனிதா, லாஸ்லியா மீது புகார் அளித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement