மஹத் காதலிக்கு Phone செய்த பிக்பாஸ்.! வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்.!

0
977
mahat-bigg-boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் மஹத்தான் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகின்றனர். அதிலும் இவர் யாஷிகாவிடம் செய்யும் பல்வேறு அத்துமீறிய செயல்களால் மக்கள் இவர் மீது கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மஹத் செய்து வரும் மற்றுமொரு சில செயலால் அவரது காதலி சற்று கோவத்தில் இருக்கிறாராம்.

-விளம்பரம்-

Bigg-Boss-mahat

- Advertisement -

மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, சில நாட்களுக்கு முன்னர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்தபோது மஹத் மற்றும் யாஷியா குறித்து முகநூல்வாசி ஒருவர் கேள்விகேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பிரச்சி மிஸ்ரா, ‘அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,மஹத் செய்வது தவறு என்று யாஷிகா கூறினால் தான் பிரசச்னை. ஆனால், அவர் அவ்வாறு கூறவில்லை. மஹத் எப்போது இப்படி தான் அனைவரிடமும் காமெடியாக இருப்பார்’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் , மற்ற விடயத்தில் மஹத் மீது தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால், அவர் பிக் பாஸ் வீட்டில் அதிக ஆடைகளை பயன்படுத்தி வருகிறார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்கிக்கு செல்லும் முன்னர்தான் 10 ஜோடி ஜீன்ஸ், டீ ஷர்ட் ஆகியவற்றை வாங்கி கொடுத்தேன். ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.

-விளம்பரம்-

Mahat-Raghavendra

அந்த போனில் மஹத், புது துணி வேண்டும் என்று கேட்டதாக கூறினார்கள். அதை கேட்டதும் எனக்கு கடும் கோவம் ஏற்பட்டது. இதனால் இருக்கிற துணியை துவைத்து போட சொல்லுங்கள் என்று கூறிவிட்டேன். ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் துணி மாற்றுவது. இந்த விடயத்தில் அவர் மீது நான் கடும் கோவத்தில் இருக்கிறேன். அவர் வெளியே வரட்டும் இதற்காக நான் அவரை நிச்சயம் பழி வாங்குவேன்” என்று மஹத் மீது செல்லமாக கோவித்துக் கொண்டுள்ளார் பிரச்சி மிஸ்ரா.

Advertisement