`என்கிட்ட மட்டும்தான் இப்படி ஸ்வீட்டா பேசுறியா’ – பெட் ரூமில் துருவி துருவி கேட்ட மகேஸ்வரி – இந்த முறையும் அபிநவ் – பவானி Templete ஆ ?  

0
570
maheswari
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் உருவாகிய வரும் காதல் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி நான்கு நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கதைகள் உருவாகுவது வழக்கமான ஒன்று தான். முதல் சீசனில் ஓவியா-ஆரவ் காதல் இரண்டாம் சீசனில் மஹத் – யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின்- லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி – ஷிவானி, ஐந்தாவது சீசனில் அபினவ் – பாவணி மற்றும் அமீர் – பாவனி என்று ஒவ்வொரு சீசனிலும் காதல் கதை உருவாகியது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

ஆனால், கடைசி சீசனில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோரும் திருமணம் ஆகாத புது ஜோடிகள் தான் காதலில் விழுந்தார்கள். ஆனால், கடந்த சீசனில் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தந்தையான அபினவ்விற்கும், கணவரை இழந்த பாவனிகும் காதல் ஆரம்பித்தது போல அதிகமாக பேசப்பட்டது. அதற்குப் பின் இவர்கள் இருவரும் காதலிப்பதாகபிக் பாஸ் வீட்டிலேயே கிசுகிசுக்கப்படகு. ஆனால், பல சர்ச்சைகளில் மாட்டி கொண்டதால் பாவனி அபிநவ்வை நான் காதலிக்கவில்லை என்று சொன்னார்.

பிக் பாஸ் காதல் ஜோடிகள்:

அதற்குப் பிறகு தான் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அமீர் நுழைந்து பாவனியை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால், பாவனி முதலில் முடியாது என்று சொல்லிவிட்டார். பின் இருவரும் பழகுவதை பார்த்து ரசிகர்களும் இவர்களுடைய காதலை உறுதி செய்திருந்தார்கள். அதேபோல் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் காதல் ஜோடி உருவாகிவருவது போலவே காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அது வேறு யாரும் இல்ல ராம்- மகேஸ்வரி தான். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாளில் இருந்தே மகேஸ்வரி பலரிடமும் சிடு சிடு வென்றும், கோபமாகவும் தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால், ராமிடம் மட்டும் பொறுமையாக ஸ்வீட்டாக பேசுகிறார்.

-விளம்பரம்-

மகேஸ்வரி-ராம் பேசியது:

இதுகுறித்து நேற்றைய நிகழ்ச்சியில் மகேஸ்வரி, நீங்கள் எல்லா பெண்களிடம் இப்படி தானா? இல்லை என்னிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு ராம், நான் பெண்களிடம் அமைதியாக தான் இருப்பேன். உங்களிடம் ஸ்வீட் ஆக தான் பேசுகிறேன் என்று சொன்னார். அதுக்கு தான் ஏன் அப்படி பேசுகிறீர்கள்? என்று மகேஸ்வரி கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை சும்மா funனுக்காக என் மனதில் தோன்றியதற்காக பேசினேன் என்று சொன்னார்.

மகேஸ்வரி-ராம் காதல் கதை:

ராம் எல்லா பெண்களுடன் அப்படி தான் பேசுவேன் என்று பொதுமையாக கூற, மகேஸ்வரி தன்னை பற்றி ராம் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளவே மீண்டும் மீண்டும் ராமிடம் விளையாட்டுக்காகவா? இல்லை உங்கள் மனதில் தோன்றியதா? எதற்காக அப்படி என்னிடம் மட்டும் ஸ்வீடாக பேசுகிறீர்கள் என்று நோண்டி நோண்டி கேட்டுகொண்டே இருந்தார். உடனே ராம் ஏதேதோ பேசி சமாளித்து அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த முறையும் ஒரு கன்ஃபார்ம் ஒரு காதல் உருவாகிவிட்டது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement