எனக்கு நிச்சயம் முடிந்ததும் மணி எனக்கு கால் பண்ணான், நாங்கள் பிரிந்ததற்கு காரணம் இதான் – போட்டுடைத்த பெலினா.

0
526
- Advertisement -

எங்களுடைய பிரிவிற்கு ரவீனா தான் காரணம் என்று மணியின் முன்னாள் காதலி பெலினா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்று வாரங்களை கடந்து இருக்கிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி இருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்த சீசனில் மணிச்சந்திரா- ரவீனா இருவரும் காதல் ஜோடிகளாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருக்கிறது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரில்ஸ் வீடியோக்கள், நடனமெல்லாம் செய்திருக்கிறார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளே இவர்கள் இருவரும் வேக்கப் பாடலில் பயங்கரமாக ஆட்டம் போட்டு திடீரென்று ரவீனா மணி இடுப்பில் உட்காந்ததெல்லாம் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அடிக்கடி ரவீனா- மணி இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக, இருவரும் ரகசியம் பேசுகிறோம் என்று பிக் பாஸ் விதியை மீறி கையில் எழுதி பேசிருந்தார்கள்.
இதை கமலும் கண்டித்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் பேசுவது குறித்து வெளியில் மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இதை நேரடியாகவே விசித்திரா, நீங்கள் ரெண்டு பேரும் லவ்வரா? என்று ஓபனாக கேட்டிருக்கிறார். உடனே ரவீனா, இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திரா, நீங்கள் பழகுவதை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. காதலர்கள் போல் இருக்கிறீர்கள். அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்.

உடனே ரவீனா, நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்.கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள் என்று மழுப்பி பேசி இருக்கிறார். உடனே மணி நீங்க சொல்லியே வந்துடும் போலவே என்று கூறி இருக்கிறார். அதே போல விஷ்ணு, பூர்ணிமா, மாயா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் போது விஷ்ணு ‘அவர்கள் இருவரும் வெளியில் இருக்கும் போதே காதலர்கள் தான் என்று சொன்னார்கள். ஆனால், கேட்டால் நண்பர்கள் என்று சொல்கிறார்கள் என்று மாயாவிடம் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் மணி – ரவீனா குறித்து தான் கிசு கிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மணியின் முன்னாள் காதலியும் நண்பருமான பெலினா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், நானும் மணியும் நன்றாக பழகி வந்தோம். ரவீனா வந்த பிறகு தான் மணி உடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பின் நாங்கள் பிரிந்து விட்டோம். எனக்கு எங்கேஜ்மென்ட் நடக்கும்போது மணி கால் பண்ணி என்னிடம் பேசி இருந்தார்.

உண்மையிலேயே மணி-ரவீனா ரெண்டு பேருமே ரொம்ப நெருக்கமாக தான் பழகுகிறார்கள். நட்பை தாண்டி அவர்களுக்குள் ஒரு நெருக்கம் இருக்கிறது. வெளியில் மணி நானும் காதலை சொல்லிக்கொள்ளவில்லை. இருந்தாலும் மணி-ரவீனா நெருக்கத்தை குறித்து பலருமே பலவிதமாக பேசியிருந்தார்கள். ஒரு கட்டத்தில் மணி நானும் சேர்ந்து உன்னுடைய கேரியரை நீ பாரு, நான் என்னுடைய கேரியரை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டோம். அதற்குப் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார்.

Advertisement