இவங்க கூட ஐசுவ தனியா விட மாட்டேன், எங்களுக்கு Safety இல்ல. இந்த முறை மாயா&கோ டார்கெட் செய்தது யாரை தெரியுமா?

0
414
- Advertisement -

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா வெளியேற அவரை தொடர்ந்து 5 Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் Double Eviction நடைபெற்றது.

- Advertisement -

பிரதீப்பின் வெளியேற்றம் :

இதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card பெற்று வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். டைட்டில் வின்னர் வாய்ப்பு இருந்த பிரதீப்பின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல் எழுப்பியவர்கள் :

அதிலும் குறிப்பாக அவரை எதோ பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக முத்திரை குத்தி அனுப்பப்பட்டது தான் பலருக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பிரதீப்பிற்கு எதிராக விசித்ரா, அர்ச்சனா மற்றும் அன்ன பாரதியை தவிர அணைத்து போட்டியாளர்களும் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என்பது போலவே கூறி இருந்தனர். பிரதீப் வெளியேறியதில் இருந்தே அர்ச்சனா மற்றும் விசித்ரா, மாயா & Coவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிரதீப் வெளியேறியதில் இருந்தே அவரை மாயா மற்றும் அவரது தோழிகள் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவரை வெளியில் அனுப்பி வைத்தார்கள் என்று அர்ச்சனா தொடர்ந்து கூறி வருகிறார் மேலும் பிரதீப் அப்படி என்ன செய்தார் என்று தொடர்ந்து அர்ச்சனா கேள்வி எழுப்பிக் கொண்டே வருகிறார் இதனால் மாயா & கோவிற்கும் அர்ச்சனா விற்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது மேலும் அர்ச்சனாவிற்கு ஆதரவாக தினேஷ் மற்றும் விசித்ராவும் மாயா & கோவை வச்சி செய்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் புதிய பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறார்கள் மேலும் மாயாவிற்கு ஒத்து ஊதும் வகையில் அக்ஷயா ஜோவிகா மற்றும் ஐஷு ஆகிய மூவரும் எங்களுக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். மேலும், தினேஷ், அர்ச்சனா, விசித்ரா ஆகிய மூவருமே பெண்கள் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பதால் அவர்களிடம் ஐசுவை நான் தனியாக விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார் மாயா.

Advertisement