ஏய், அவன் என் ஜாதி என்னனு கேட்டான்டி – சொன்ன விஷயத்தை அப்படியே Twist செய்து புதிய பஞ்சாயத்தை கிளப்பிய மாயா.

0
758
- Advertisement -

மாயா- மணி குறித்த சர்ச்சைக்கு வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மற்ற பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்களில் மாயா ஒருவர். முதல் நாளில் இருந்தே மாயா போட்டியாளர்களிடம் வம்பு இழுத்து தான் வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா:

குறிப்பாக, கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனியிடம் இவர் செய்த சண்டை வைரலாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் மாயா பிறரை கேலி, கிண்டல் செய்வது என்று இருக்கிறார். மேலும், விஜய் வர்மா- மாயா இருவரும் மற்றவர்களை கிண்டல் செய்ததெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருந்தது. அதேபோல் நேற்று எபிசோட்டில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது. அப்போது மணி, மாயாவை நாமினேட் செய்திருந்தார். அதற்கு அவர், நாங்கள் ஆடும்போது எங்களை நீங்கள் தரகுறைவாக பார்ப்பது போல உங்கள் பார்வை இருக்கிறது.

ஓபன் நாமினேஷனில் மாயா:

அது என்ன பார்வை என்று தெரியவில்லை என்று சொல்கிறார். உடனே மாயா, என்னுடைய பார்வையே அப்படித்தான். அது உங்களுக்கு அப்படி தோன்றியதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். பின் மணி, நான் உங்களிடம் பேச முயற்சித்தும் நீங்கள் பேசவில்லை. நான் ஏன் உங்களிடம் பேசுவது கிடையாது என்றால் யுகேந்திரன் சார் கேப்டன் ஆக இருந்தபோது அவரை நீங்கள் மரியாதை குறைவாக நடத்தினீர்கள். யார் உங்களிடம் வந்து பேசினாலும் நீங்கள் அப்படித்தான் பேசுகிறீர்கள். எனக்கு என்னுடைய சுயமரியாதை முக்கியம். அதனால் தான் நான் உங்களிடம் பேசுவதில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மாயா-மணி சர்ச்சை:

இதனை அடுத்து மாயாவிடம் மணி எதார்த்தமாக நீங்கள் ஏன் பிரியாணி சாப்பிட மாட்டீர்கள். பிராமினா? என்று கேட்டார். உடனே மாயா, அவன் ஜாதியை வைத்து பேசுகிறான் என்று சர்ச்சை கிளப்பி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டியில் வனிதா, மாயா இந்த விஷயத்தில் சூழ்ச்சி செய்கிறாள். இதெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களை ஏமாற்றும் விஷயம். இந்த விஷயத்தில் மாயா ரொம்ப ஸ்மார்ட். மணி வெஜிடேரியனா? என்பதை தெரிந்து கொள்ளத்தான் பிராமினா என்று கேட்டு இருக்கான். இன்னும் வரையுமே எந்த விண்ணப்பத்திலும் உங்களுடைய ஜாதி என்ற கேள்வி இருந்து கொண்டு தான் இருக்கிறது.

வனிதா அளித்த பேட்டி:

இதை மாயா தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறார். இதை ஏன் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும். என்னையும் கூட சில பேர் நீங்கள் பிராமினா? தேவரா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அதை நாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. ஆனால், மாயா இந்த விஷயத்தை பெரிது படுத்துகிறார் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இதை மணி பேசும் பொழுது மாயா நேரடியாக கேட்டிருக்க வேண்டும். மாயா முகத்திற்கு நேராக யாரையும் கேள்வி கேட்க மாட்டுகிறாள். அவள் பின்னாடி தான் மற்றவர்களை பற்றி குறை சொல்கிறார். அவள் பிராமினோ இல்லையோ ஆனால் மூன்று வாரங்கள் அவள் மாமி வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் வனிதா.

Advertisement