திடீர்னு கட்டி புடிச்சி முத்தம் கொடுத்துட்டாரு – ஏற்கனவே பாலியில் புகாரில் சிக்கியுள்ள பிக் பாஸ் போட்டியாளர். அதுவும் யார் தெரியுமா ?

0
2211
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. வழக்கம் போல் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை கலவரம் தொடங்கி விட்டது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா கிருஷ்ணன்:

அந்த வகையில் இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் மாயா கிருஷ்ணனும் ஒருவர். இவர் நடன கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தனியாக ஒரு நாடக குழு ஒன்று நடத்தி வருகிறார். இவர் நடனம் மட்டும் இல்லாமல் வானவில், தொடரி, மகளிர் மட்டும், விக்ரம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இரண்டே நாளில் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆகியிருக்கிறார்.

மாயா குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் மாயா குறித்த பழைய சர்ச்சையான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஐந்து வருடங்களுக்கு முன்பு மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகி அனன்யா என்பவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் அவர், மாயா கிருஷ்ணனை நான் 2016 ஆம் ஆண்டு தான் முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு 18 வயது. அவர் நிறைய எனக்கு ஆலோசனைகளை சொன்னார். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் நன்றாக பழக ஆரம்பித்து விட்டோம்.

-விளம்பரம்-

மாயா மீது பாலியல் புகார்:

அப்போது அவர், நான் அவருடன் மட்டும் தான் பழக வேண்டும் என்று நினைத்தார். என்னிடம் பேசும் நண்பர்களை எல்லாம் அவர் ஏதோ ஒரு காரணங்களை சொல்லி விலக வைத்தார். அது மட்டும் இல்லாமல் என் பெற்றோர்களிடம் இருந்து என்னை ஒதுக்க நினைத்தார். இப்படி இருக்கும் போது ஒருநாள் திடீரென்று அவரை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அதனை அடுத்து பாலில் ரீதியாகவும் என்னை அவர் துன்புறுக்க செய்தார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மாயா, என்னை பற்றி அனன்யா சொன்னது அத்தனையுமே பொய்.

மாயா கொடுத்த விளக்கம்:

என் இடம் விசாரணை நடத்த போலீசுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர் வேண்டுமென்று என் மீது பொய்யான புகார்களை கொடுக்கிறார். இதனால் அவர் மீது நான் வழக்கும் தொடர இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை தற்போது மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். மாயா மீது இது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். எது என்னவோ மாயா இப்படியே பிக் பாஸ் வீட்டிற்குள் கன்டன்ட்டை கொடுத்து வந்தால் கண்டிப்பாக நீண்ட நாட்கள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement