வடக்கன் பத்தாம, போஸ்ட் போட 100ரூ பேரம் – அம்பலமான மாயாவின் PR வேலைகள். வைரலாகும் Screenshot

0
627
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயாவிற்கு ஆதரவாக போஸ்ட் போட சொல்லி பேரம் பேசி வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 95 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 7:

இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பி ஆர் டிம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். போட்டியாளர்கள் தங்களுக்கு அதிகமாக ஓட்டு போடவும் மக்கள் மத்தியில் பிரபலமாக்க ஒரு குழுவை வைத்திருக்கிறது. அதற்கு தான் பி ஆர் டீம் என்று சொல்வார்கள். அந்த வகையில் மாயாவின் ஃபேன் பேஜிலிருந்து ஒரு நபர், நீங்கள் மாயாவிற்கு ஆதரவாக ஒரு போஸ்ட் மற்றும் ஸ்டோரி போட 100 ரூபாய் கொடுப்போம் என்று பேரம் பேசுகிறார்கள்.

போட்டியாளர்கள் கருத்து:

அதற்கு மற்றொரு நபர், இந்த பணம் பத்தாது இன்னும் அதிகமாக வேண்டும் கேட்கிறார். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஸ்கிரீன்ஷாட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் மார்னிங் டாஸ்க் ஒன்று பிக் பாஸ் கொடுத்து இருந்தார். அதில், நீங்கள் யாரெல்லாம் வெளியே ஓட்டு போடுவதற்காக பிஆர் செட் பண்ணி வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு போட்டியாளர்கள் பலரும் அர்ச்சனாவின் பெயரை தான் சொல்லி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அர்ச்சனா -விசித்திரா சண்டை:

இதனால் அர்ச்சனா கடுப்பாகி, எனக்கு பிஆர்க்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்கிற அளவுக்கு வசதி எல்லாம் கிடையாது. நானே ஒரு வருஷமா எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வருமானம் இல்லாமல் தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பின் அர்ச்சனாவுக்கும் விசித்திராவுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. இன்னும் இவர்களுடைய வாக்குவாதம் முடிந்த பாடில்லை.

நெட்டிசன்கள் கருத்து:

சொல்லப்போனால், இருவருக்கும் மத்தியில் பனிப்போரை நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், உண்மையில் மாயாவிற்காக தான் பி ஆர் டீம் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது தெரியாமல் மாயா அர்ச்சனாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆக மொத்தம், இந்த வார இறுதியில் கமல் இதைப் பற்றி விசாரிப்பார் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement