அவர பார்த்தாலே பயமா இருக்கு, என்ன எதனா பண்ணிடுவாருனு பயமா இருக்கு – மீரா மிதுன் போல சர்ச்சையை கிளப்பிய மாயா.

0
1956
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ்- பிரதீப் குறித்து மாயா பேசியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஏழு நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான முகங்களில் மாயகிருஷ்ணனும் ஒருவர். இவர் நடன கலைஞர் ஆவார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே மாயா தன்னுடைய வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டார். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா கிருஷ்ணன் கருத்து சுதந்திரம், பெண்கள் என்றால் இப்படித்தான் என்று ஓவர் அல்டாப்பு செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக, இவர் விஜய் வர்மா உடன் செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் அளவே இல்லை. தன்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று பிறப்போட்டியாளர்களிடம் இவர் சர்ச்சையில் சிக்கிருக்கிறார்.

நிகழ்ச்சியில் மாயா:

குறிப்பாக கூல் சுரேஷிடம் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டுதான் சென்றார். இதனை அடுத்து இரண்டாம் வாரத்திற்கான கேப்டனாக சரவணா விக்ரம் தேர்வாகி இருக்கிறார். இவர் சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு ஆறு பேரை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார். அதில் மாயா, பவா செல்லதுரை ஆகிய இருவரும் இருக்கிறார்கள். பவா செல்லதுரை என்னால் இனிமேல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி நிகழ்ச்சி விட்டு வெளியேறுகிறார். மாயா வழக்கம்போல் தன்னுடைய வேலையை காண்பிக்க ஆரம்பித்தார். இவர் கூல் சுரேஷ் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். அந்த வீட்டில் எனக்கு சேஃப்டி இல்லை. என்னால் நிம்மதியாக இரவு தூங்க முடியாது.

-விளம்பரம்-

கூல் சுரேஷ்-பிரதீப் குறித்து சொன்னது:

பிக் பாஸ் சொல்லும் வரை நான் மைக்கை போட மாட்டேன். சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். பின் வேறு வழியில்லாமல் சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு மாயா சென்றார். அதற்கு பிறகு தான் பிக் பாஸ் மாயாவை அழைத்து பேசினார்கள். அப்போது மாயா, ஸ்கூல் சுரேஷை பற்றி எதுவும் பேசாமல் பிரதீப் சரியில்லை. என்னால் அவர் இருக்கும் இடத்தில் இருக்க முடியாது. இரவு நேரத்தில் அவர் எழுந்து விட்டு என்னவோ செய்து கொண்டிருக்கிறார். அதனால் எனக்கு பயமாக இருக்கிறது. என்னுடைய உயிருக்கும் பயமாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றெல்லாம் பிரதீப்பை பற்றி குறை சொல்லி பேசுகிறார். உடனே பிக் பாஸ் கடுப்பாகி, ஒவ்வொருவரையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

பிக் பாஸ் சொன்ன அறிவுரை:

உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஆரம்பிக்க போகிறது என்றால் அதற்கு முன்பே நாங்கள் வந்து விடுவோம். நீங்கள் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் நிம்மதியாக உறங்குங்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சமாளித்து அனுப்பி இருக்கிறார். இப்படி மாயா நிகழ்ச்சியில் விஜய் வர்மாவை தவிர பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் குறித்து மோசமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அதுவும் கடந்த சில தினங்களாகவே இவர் பலரையும் விமர்சித்தும், தான் எல்லாம் தெரிந்தவர், பெரிய புத்திசாலி என்பது போல நடந்து கொண்டிருக்கிறார். இதனால் இந்த வார இறுதியில் கமல் கண்டிப்பாக மாயாவை கண்டிப்பார் என்று கூறப்படுகிறது

Advertisement