ஏஞ்சலீனா ஜோலி மாதிரி வேணும்னு என்ன கமிட் பண்ணாரு.. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் மீரா..

0
10510
naveen-meera
- Advertisement -

கடந்த வாரம் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. மேலும், இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர் நடிகை மீரா மிதுன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தது. பிரபல மாடல் நிறுவனத்தின் உரிமையாளரான மைக்கேல் என்பவர் பல்வேறு பெண்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். மேலும், தன்னையும் மாடல் நிகழ்ச்சி மூலம் பல லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக போலீசிலும் புகார் அளித்திருந்தார் ஜோ மைக்கல். இதனால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மீராமிதுன் பெரும் சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். சொல்லப்போனால் சர்ச்சையில் சிக்கியதால் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

-விளம்பரம்-

வெளியில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் அங்கேயும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வந்தார் மீரா மிதுன். சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்தது முகேனிடம் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோவை தயார் செய்ய சொன்னது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீராமிதுன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். ஆனால், படம் வெளியான பின்னர் இவரது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு இருந்தது இதனால் படக்குழுவினரை கடுமையாக விமர்சித்தார் மீராமிதுன். இதைத் தொடர்ந்து மூடர்கூடம் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னிசிறகுகள் படத்தில் இருந்தும் தன்னை நீக்கி விட்டதாக மீரா மிதுன் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிகில் ட்ரைலர் குறித்து ட்வீட் செய்த தமிழரின் எதிரி ராஜபக்க்ஷேவின் மகன்..கழுவி ஊற்றிய தமிழகர்கள்..

- Advertisement -

அதில், சினிமா துறையில் பிரபலமான குடும்பம். தங்களுடைய செல்வாக்கினை பயன்படுத்தி மூலம் அவருடைய மகளை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லையா? இது தவறான செயல் இல்லையா? என்று கேள்வி கேட்டு வருகிறார். மேலும், அம்மா கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குனர் நவீன் அவர்களை கூட விடவில்லை. ஏன்? இப்படி இரட்டை வேஷம் போட்டு நடிக்கிறீர்கள் என்றும் தாறுமாறாக கேள்வி கேட்டு இருந்தார் மீரா. மீரா மிதுனின் இந்த குற்றசாட்டிற்கு முதன் முறையாக பதில் அளித்துள்ளார் இயக்குனர் நவீன்.

இதுகுறித்து சமீயத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நவீன், ஷாலினி பாண்டேவுக்கு பதில் தான் அக்ஷரா ஹாசன் அக்னிச்சிறகுகள் படத்தில் நடிக்கிறார் இந்த கதாபாத்திரத்தில் மீராமிதுன் கமிட் செய்யப்படவே இல்லை ஆனால் பிரஸ்மீட்டில் மீரா மிதுன் இந்த படத்தில் இருப்பதாக கூறியுள்ளார் ஆரம்பத்தில் இதை பற்றி நான் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் இப்போ இதோ என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் நவீன் இந்த பதிவினை கண்டு மிகுந்த கோபம் அடைந்த மீரா மிதுன் தொடர்ச்சியாக பல்வேறு உயிர்களை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதில் நீங்கள் மிகப்பெரிய பொய் புளுகி என்று கூறியுள்ள மீராமிதுன். நவீன் அளித்த பேட்டி ஒன்றின் லிங்கை பகிர்ந்துள்ளார். மேலும், இது நீங்கள் அளித்த பேட்டி தான். ஆண்மகனாக நடந்து கொள்ளுங்கள், கோழைத்தனமாக இல்லாமல் தைரியமிருந்தால் உண்மையைப் பேசுங்கள். இல்லை உங்களுக்கு ஏதாவது மறதி நோய் இருக்கிறதா என்பதை மனோதத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதியுங்கள். வேண்டுமென்றால் நான் ஆதாரத்தையும் நான் வெளியிட தயார் என்று கூறியுள்ளார். மேலும், இதோடு மட்டும் நிறுத்தி விடாமல் மீரா மிதுன் அடுக்கடுக்கான ட்வீட் களை பதிவிட்டு வருகிறார்.

அதில், இதே போன்று நீங்கள் பொய்களை கூறி வந்தால் என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தையும் நான் வெளியிட தயார். மேலும், அம்மாகிரியேஷன் தான் என்னை இந்தப் படத்தில் கமிட் செய்து, அதன் பின்னர் உங்களை சந்திக்க வைத்தனர். மேலும், நவீன் அளித்த பேட்டி ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை நவீனின் டீவீட்டிற்கு கீழ் கமண்டாக பதிவிட்டுள்ள மீரா மிதுன், இந்த பேட்டியில் நீங்கள் சொன்னதும் பொய்யா, உங்களுக்கு நினைவிருக்கிறதா நீங்கள் என்னிடம் ஏஞ்சலினா ஜோலியை போன்ற தோற்றமுடையவர் வேண்டும் என்று எனக்கு சில குறிப்புகளையும் வழங்கினார்கள். அதைப்பற்றி நாம் இருவரும் விவாதித்து இருந்தோம். அதையெல்லாம் நீங்கள் மறந்திருந்தால் அதை அனைத்தையும் நான் மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்மீரா மிதுன்.

Advertisement