டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீது புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் ட்வீட் – இது என்ன புது பஞ்சாயத்து.

0
18537
meera
- Advertisement -

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் மூன்றாவது திருமண விஷயம் தான் ஆனால் தற்போது அந்த விஷயம் கொஞ்சம் அடங்கிய நிலையில் தற்போது புதிதாக சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார் பிக் பாஸ் போட்டியாளர் நடிகையுமான மீரா மிதுன் அவருக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை சூப்பர் மாடல் என்று தம்பட்டம் அடித்து கூறும் மீராமிதுன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவர் பல்வேறு சர்ச்சையான விஷயங்களில் சிக்கியிருந்தார். அதிலும் சேரன் மீது இவர் வைத்த குற்றச்சாட்டுகளும் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அடங்காத மீராமிதுன், கடந்த சில காலமாகவே தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் கூட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

விஜய் மற்றும் சூர்யா குறித்து இப்படி பேசியுள்ளது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் மீரா மிதுனை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.அந்த வகையில் டிக் டாக் புகழ் ஜி பி முத்துவும் மீரா மிதுனை திட்டி தீர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த மீரா மிதுன், ஜி பி முத்து மீது காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement