லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி.! மற்ற போட்டியாளர்கள் எப்படி.! மீராவின் விளக்கம்.!

0
6750
meera-mithun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கண்டன்ட் கொடுத்தது மீரா மட்டும் தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மீரா. இருப்பினும் அப்போது மீராவிற்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு இருந்தது.

-விளம்பரம்-
Image result for meera mithun interview

- Advertisement -

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அம்மணி தன் தலையிலேயே மண்ணை வாரி போட துவங்கிவிட்டார். அதிலும் சேரன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் ஆடிய நாடகம் தான் இவருக்கு வினையாக அமைந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் மீராவிற்கு சேரன் தான் ஆதரவாக பேசி வந்தார்.

இதையும் பாருங்க : உறுதியானது 17வது போட்டியாளர்.! இந்த தேதியில் வருகிறாராம்.! வெளியான ஆதாரம் இதோ.! 

ஆனால், அவர் மீதே பழி போட்டதால் மீரா மீது ரசிங்கர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் நேரலையில் வந்த மீரா ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

-விளம்பரம்-

அப்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவர் குறித்தும் பேசி இருந்த மீரா அணைத்து போட்டியாளர்களயும் ஒரே வார்த்தையில் விவரித்தார்.
அதில்,

  • அபிராமி – போலியானவர்
  • சேரன் – ஆண் சர்வாதிகாரர்
  • கவின் – நேர்பட பேசுபவர்
  • லாஸ்லியா – வெகுளி
  • மதுமிதா – டிராமா
  • முகென் – சிறப்பானவர்
  • ரேஷ்மா – நடுநிலையானவர்
  • சாக்க்ஷி – தீமையானவர்
  • சாண்டி – ஸ்வீட்
  • சரவணன் – வேடிக்கையானவர்
  • தர்ஷன் – போலியானவர்
  • ஷெரின் – போலியானவர்

போட்டியாளர் குறித்து மேலும் பேசிய மீரா அங்குள்ள அணைத்து பெண் போட்டியாளர்கள் அனைவரும் தந்திரமாக தான் விளையாடுகிறார்கள் என்றார். அதே போல லாஸ்லியா ஒரு ஊமை குசும்பு என்றும் தர்ஷன் ஒரு பச்சோந்தி, நட்பிற்கு இலக்கணம் கவின் என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த வீட்டில் மிகவும் வாசிகரமானவர் யார் என்ற கேள்விக்கு தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டார்.

Advertisement