பணத்தை வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுத்துள்ள மீரா மிதுன் – ஆதாரத்தை வெளியிட்ட ரவீந்தரன்.

0
982
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்திரன் பற்றி வனிதாவின் திருமண விஷயத்தில் நான் அனைவரும் பார்த்திருப்போம். சமீபத்தில் மீரா மிதுனும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் இணைந்து பேட்டி கொடுப்பதாக இருந்தது. ஆனால், மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்ததும் தயாரிப்பாளர் ரவீந்தரன் அந்த பேட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், தயாரிப்பாளர் ரவீந்தரனை கோலிவுட் மாஃபியா மிரட்டியதால் தான் அவர் பேட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திரன் மீரா மிதுனை மட்டும் நேரில் கண்டால் கிழித்து தொங்க விட்டு விடுவேன் மேலும் அதற்கு பயந்து நான் ஏதோ பேட்டியில் பங்கு பெறவில்லை என்று சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறது. உன்னை நேரில் கண்டால் ஐம்பதாயிரத்தை கொடுத்து இனி நீ வாயைத் திறக்காது என்று சொல்லிவிடுவேன்.ரவீந்திரனின் இந்த பேட்டியை கண்ட மீராமிதுன் பேட்டியில் பங்கு பெறாமல் கோழைத்தனமாக ஓடி விட்டு இப்போது ஏன் ஏதோ தைரியமான ஆள் போல பேசுகிறீர்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதிலடி கொடுத்து இருந்த ரவீந்திரன் உண்மையாகவே மீராமிதுன் பெயரில் 50,000 ரூபாயை எடுத்து அதனை புகைப்படமாக எடுத்து மீரானுக்கு ட்விட்டரில் ஷேர்செய்தும் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மீராமிதுன், ரவீந்திரன் உடன் பேட்டியில் பங்கு கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் இதற்காக தான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார் மீராமிதுன். ஆனால் ரவீந்திரன் தனக்கு பணம் கொடுக்கவில்லை அதனால் நான் பேட்டியில் பங்கு கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார் மீராமிதுன்.

அதுமட்டுமல்லாது விமான நிலையத்தில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் கூறி இருந்தார் மீரா மிதுன். மீரா மிதுன் இந்த வீடியோவுக்கு பதிலளித்த ரவீந்திரனை கிழித்து தொங்க விட்டார். மேலும் நீ வந்து பேட்டி கொடுத்தால் மட்டும் தான் உனக்கு பணத்தை கொடுக்க முடியும். இல்லையென்றால் நீ எப்படி டிமிக்கி கொடுப்பார் என்பது தெரியும் வார்த்தைக்கு வார்த்தை நீ செலிபிரிட்டி என்று சொல்லிக் கொள்ளாத உன்னை வைத்து தமிழகத்தில் யார் படம் எடுப்பார்கள் என்பதை நான் பார்க்கிறேன். உன்னை வைத்து பாம்பே படம் எடுக்காது என்றும் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன். மேலும், ஏற்கனவே பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் இவர் மீது ஒருவர் புகார் அளித்து இருக்கும் ஆதாரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீந்திரன்

-விளம்பரம்-
Advertisement