யார சொல்றன்னு புருஞ்சதா ‘பற புத்தி’ – சமூக பெயரை குறிப்பிட்டு மீரா போட்ட சர்ச்சை பதிவு.

0
2931
Meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த மாதங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

- Advertisement -

கடந்த சில நாட்களாக டிவிட்டரில் எந்த பதிவையும் போடாமல் இருந்த மீரா, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கமுடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறி கண்ணீர் மல்க கூறி அழுதார் மீரா. நடிகை மீரா மிதுன், dreamy night என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறி இருந்தார்.

அம்மணிக்கு தற்போது இருக்கும் பிரச்சனையில் தமிழ் நாட்டில் ஒரு பிட்டு சீன் கூட எடுக்க முடியாது அதனால் டெல்லியில் இந்த வெப் சீரியஸை எடுத்துள்ளதாக கூறி இருந்தார். அதே போல தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து வருவதாக கூறிய மீரா மிதுன் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார். மற்றவர்கள் தன் ஸ்டைல், மூஞ்சி எல்லாம் காபி அடிப்பதாக கூறிய மீரா மிதுன், இந்த பாடலை பல்வேறு பாடல்களில் இருந்து காப்பி அடித்துள்ளார் என்பது தான் வேடிக்கை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர், என்னுடைய பாடல் வெளியான பின்னர் அனைவரும் பாடலை வெளியிடுகிறார்கள். உங்கள் பாடல் வெளியீட்டிற்கு என் பாடல் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துஙகள். யாரை சொல்றேன்னு புரிஞ்சதா. வீடியோ போட்டு அசிங்க பட்றதுக்கு முன்னாடி ஒழுங்கமா நடந்துக்கோங்க பற புத்தி, என் புகழை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் நான் சென்ஸ் என்று பதிவிட்டுள்ளார்’ என்று ட்வீட் போட்டுள்ளார். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த பலரும் மீரா மிதுனை கண்ட மேனிக்கு திட்டி தீர்ந்து வருகின்றனர். இதுநாள் வரை தனி நபர் தாக்குதலை செய்து வந்த மீரா மிதுன் தற்போது ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு இப்படி பதிவிட்டு இருப்பது பலரின் கோபத்தை தூண்டியுள்ளது.

Advertisement