மீரா மிதுன் தான் கடந்த சில நாட்களாகவே மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மீரா மிதுனின் திருமண பத்திரிகை புகைப்படங்களை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மீரா மிதுன் தனக்கு திருமணம் ஆனதை பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே கூறி இருந்தார். அப்போது பேசிய அவர், 5 வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது.இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார். அந்த திருமணம் சட்டபடி பதிவு செய்யபடாததால் எனக்கு என்னுடைய அப்பா, என் கணவரை பிறந்ததும் மூன்று சாய்ஸ் கொடுத்தார். ஒன்று வெளிநாடு சென்று படி இல்லை இதை அனைத்தையும் மறந்துவிடு. இது ரெண்டும் இல்லனா உன் இஷ்டம் என்று கூறிவிட்டார்.
ஆனால் நான் என் கணவருகாக காத்திருப்பதாக சொன்னேன். ஒரு முறை என் பிறந்தநாளன்று நானே அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். பின்னர் நான் பேசிகொண்டே இருக்கும் போது என்னை அவர் அறைந்துவிட்டார். அவர் அடித்தும் எனக்கு ரத்தம் வந்து விட்டது பின்னர் இரவு 2 மணிக்கு அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டேன்.
என் கணவர் குறித்து நான் ரொம்ப ஆசையாக இருந்தேன் ஆனால், இப்படி ஆகிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பின்னர் யார் மீதும் எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். மீரா மிதுன் தனது திருமணம் குறித்து பேசியதை கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஜூன் 29-ல் எபிசோடில் 41 நிமிடத்தில் நீங்கள் காணலாம்.