தமிழ் நாட்டை சீரழிக்க வந்த 2 குரங்குகள். மீண்டும் சர்ச்சையை களப்பிய சூர்யா தேவி.

0
1471
meera
- Advertisement -

சமூக வளைத்தளத்தில் கடந்த சில தினங்களாக பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக சென்று கொண்டு இருப்பது மீரா மிதுனின் சர்ச்சை தான். பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீரா மிதுன் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் சச்சைக்குரிய போட்டியாளராக இருந்த மீரா மிதுன் சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசி இருந்தார். அதிலும் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் மீரா மிதுனை பல்வேறு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அத்தோடு பல்வேறு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அப்போதும் விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் மீரா மிதுன். இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீராமிதுன்குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

மீரா மிதுனின் சர்ச்சைக்கு முன்பாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் மூன்றாவது திருமண விஷயம் தான். இந்த விவகாரத்தில் அவதூறாக பேசி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சூர்யா தேவி. இதனால் வனிதா இவர் மீது புகார் அளிக்க காவல்துறையினர் கைது செய்தார்கள். இப்படி ஒரு நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சூர்யா தேவி, மீராமிதுன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் தனது யூடியூப் பக்கத்தில் மீராமிதுன் மற்றும் வனிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சூர்யா தேவி தமிழகத்தை கெடுக்க வந்துள்ள இரண்டு குரங்குகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல வீடியோவில் பேசியுள்ள சூர்யா தேவி தமிழ்நாட்டில் சீரழிக்க 2 சாக்கடைகள் இருக்கிறது. அதில் ஒரு சாக்கடை தற்போதுதான் திருமணத்தை முடித்துவிட்டு ஏதோ செய்துகொண்டிருக்கிறது. தற்போது புதிதாக மீரா மிதுன் என்ற ஆம்பல ஒன்று கிளம்பியுள்ளது என்று நேரம் இதனை வறுத்து எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement